டெல்லி: நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பங்கு சந்தையில் ஏற்ற இறக்கமானது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை நேர வர்த்தகத்திலேயே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது மீண்டும் சரிவினை சந்தித்தது. குறிப்பாக காலை நேரத்தில் 6 பைசா வீழ்ச்சி கண்டு 74.84 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.

இதே இந்திய சந்தைகளும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா டாலரின் மதிப்பானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதேயாகும். கடந்த சில தினங்களாக சரிவில் இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பானது, இன்று சற்று வலுவடைந்து காணப்படுகிறது. டாலரின் மதிப்பானது 0.28% அதிகரித்து 93.89 ஆக உள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தியானது ஜூன் மாதத்தில் 16.6% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த வீழ்ச்சியானது பல துறைகளிலும் காணப்படுகிறது. குறிப்பாக உற்பத்தி, சுரங்கம், மின்சார உற்பத்தி, கேப்பிட்டல் குட்ஸ் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பலவும் வீழ்ச்சியினை கண்டுள்ளன.
இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையும் சற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் ரூபாயின் மதிப்பானது சற்று வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது.
இதோடு அமெரிக்க பத்திர சந்தையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அன்னிய முதலீடுகள் வரத்து குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவும் இந்திய சந்தைகள் சரிவில் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதன் எதிரொலி இந்திய ரூபாயின் மதிப்பிலும் காணலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 96 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 38,310 ரூபாயாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 28 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,293 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது தற்போது 74.87 ரூபாயானது 0.14% வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications