ரூபாய் மதிப்பு தடாலடி உயர்வு.. ஆனா ஒரு செக்.. முதலீட்டாளர்களை பயமுறுத்தும் பாகிஸ்தான் பிரச்சனை..!

இந்திய ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஏழு மாத உச்சத்தை எட்டி, டாலருக்கு எதிராக 84.53 ரூபாய் என்ற நிலையை எட்டியுள்ளது. ஆனால் நேற்றைய வர்த்தக முடிவில் வெறும் 1 பைசா மட்டுமே உயர்ந்தது. இந்திய சந்தையில் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து வருவதும், உள்நாட்டு வர்த்தக சூழல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் சாதகமாக இருக்கும் காரணத்தாலும் ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதேவேளையில் இந்தியா-பாகிஸ்தான் பதற்றங்கள் அதிகரித்தால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையலாம் என்று நாணய வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர்.

ரூபாய் மதிப்பு தடாலடி உயர்வு.. ஆனா ஒரு செக்.. முதலீட்டாளர்களை பயமுறுத்தும் பாகிஸ்தான் பிரச்சனை..!

வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 83.76 என்ற உயர்ந்த மதிப்பை பதிவு செய்து, ஏழு மாத உச்சத்தை எட்டியது. ஆனால், நாள் முழுவதும் ஏற்ற இறக்கமான வர்த்தகத்தால் இந்த உயர்வு நிலைத்து நிற்கவில்லை, மேலும் நாள் முடிவில் ரூபாய் 84.53 ஆக முடிந்தது, இது முந்தைய நாள் முடிவு மதிப்பை விட 1 பைசா மட்டுமே உயர்ந்தது. புதன்கிழமை, ரூபாய் 42 பைசா உயர்ந்து 84.54 ஆக முடிந்திருந்தது.

நாணய வர்த்தகர்களின் கூற்றுப்படி, ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 2.37 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. இது உள்நாட்டு சந்தையில் இருக்கும் அதிகப்படியான டிமாண்ட்-ஐ காட்டுகிறது. மேலும், இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி குறியீடு (PMI) ஏப்ரலில் 10 மாத உச்சத்தை எட்டியது, இது முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இந்த தரவுகள் ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

வங்கிகளுக்கு இடையிலான நாணயப் பரிமாற்றத்தில், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 83.98 இல் தொடங்கி, நாள் முழுவதும் 83.76 என்ற உயர்ந்த அளவையும், 84.55 என்ற குறைந்த அளவையும் பதிவு செய்துள்ளது. இதே நேரத்தில், அமெரிக்க டாலரின் வலிமையை ஆறு நாணயங்களுக்கு எதிராக அளவிடும் டாலர் குறியீடு 0.39% குறைந்து 99.85 ஆக இருந்தது.

சர்வதேச கச்சா எண்ணெய் அளவுகோலான ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.51% குறைந்து ஒரு பீப்பாய்க்கு 61.81 டாலராக வர்த்தகமானது. இது ரூபாய் மதிப்பு உயர்வுக்கு சாதகமாக அமைந்தது, ஏனெனில் எண்ணெய் இறக்குமதி செலவு குறைவது இந்தியாவுக்கு நன்மையாகும்.

ரூபாய் மதிப்பு உயர்ந்தாலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் அதிகரித்தால், இந்த உயர்வு விரைவாக இழக்கலாம் என்று நாணய வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த கால புவிசார் அரசியல் பிரச்சனைகளின் போதும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+