மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த அமர்விலேயெ வரலாறு காணாத அளவுக்கு 83 ரூபாயினை தாண்டி வீழ்ச்சி கண்டது. இன்று காலை தொடக்கத்திலும் 83.06 ரூபாய் என்ற லெவலுக்கு வீழ்ச்சி கண்டது. எனினும் முடிவில் 25 பைசா சரிந்து, 82.75 ரூபாயாக முடிவடைந்தது.
இந்த வீழ்ச்சியானது இனியும் தொடரலாம் என்றே நிபுணர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்ந்து அமெரிக்க டாலர் மதிப்பு, பத்திர சந்தை காரணமாக ஆசிய நாணயங்கள் பலவும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன.
ரூபாய் சரிவு
அமெரிக்க சந்தையானது தொடர்ந்து சரிவில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையும் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. தொடர்ந்து சந்தையில் செல்லிங் அழுத்தம் இருந்து வரும் நிலையில், இந்திய பங்கு சந்தையும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கொண்டு சரியலாம்
தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதமும் அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு சரிவுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அமெரிக்க டாலரின் மதிப்பு 14 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இதே அமெரிக்காவின் 10 வருட பத்திர சந்தையும் 4.139% ஏற்றம் காண்டும் காணப்படுகின்றது.
இவ்வளவு சரியுமா?
கடந்த 8 அமர்வுகளாகவே ரூபாயின் மதிப்பு 82 - 82.70 ரூபாயாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது 83 ரூபாயாக உச்சம் தொட்டது. கடந்த அமர்வில் 60 பைசா சரிந்து, 83.03 ரூபாயாக சரிவினைக் கண்டது. இது சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இது மீடியம் டெர்மில் 83.50 ரூபாய் மற்றும் 84 ரூபாய் என்ற லெவலுக்கு சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம்
பங்கு சந்தைகளும் சரிவில் காணப்படும் நிலையில், ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையும் மிக மோசமான நிலையை எட்டியுள்ளன. தொடர்ந்து எண்ணெய் விலையும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கம் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் எரிபொருள் இருப்பும் சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கோண்டு கச்சா எண்ணெய் விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் Vs ரூபாய்
இதன் காரணமாக அமெரிக்காவின் மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இது மேற்கொண்டு ரூபாய் மதிப்பு சரிவினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.