இந்திய ரூபாய் உயர்வு.. பாகிஸ்தான் ரூபாய் வீழ்ச்சி.. இந்தியாவின் ரூ.1-க்கு பாகிஸ்தானில் என்ன மதிப்பு?

நாணய மதிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். உலகம் முழுவதும் பரிவர்த்தனைகளுக்கு பொதுவாக அமெரிக்க டாலர் பயன்படுத்தப்படுவதால், அனைத்து நாணயங்களின் மதிப்பும் பெரும்பாலும் USD அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு பல ஆண்டுகளாக நிலைத்திருக்க, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டுவருகிறது.

தற்போதைய இந்திய ரூபாய் மற்றும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 2025 பிப்ரவரி மாதம் நிலவரப்படி, 1 அமெரிக்க டாலர் = ரூ. 86.57 (இந்திய ரூபாய்) 1 அமெரிக்க டாலர் = 278.77 (பாகிஸ்தான் ரூபாய்). இதன்படி, 1 இந்திய ரூபாயின் மதிப்பு பாகிஸ்தான் ரூபாயில் 3.22 ஆகும். இதன் பொருள், இந்திய ரூபாயை பாகிஸ்தான் ரூபாயாக மாற்றினால், அதன் மதிப்பு மூன்றரை மடங்காக இருக்கும்.

இந்திய ரூபாய் உயர்வு.. பாகிஸ்தான் ரூபாய் வீழ்ச்சி.. இந்தியாவின் ரூ.1-க்கு பாகிஸ்தானில் என்ன மதிப்பு?

உதாரணமாக, ஒருவர் ரூபாய் 1,00,000 (ஒரு லட்சம்) இந்திய ரூபாயுடன் பாகிஸ்தான் சென்றால், அது ரூ.3,22,000 (மூன்று லட்சத்து இருபத்திரண்டு ஆயிரம்) பாகிஸ்தான் ரூபாயாகும். இதே நேரத்தில், ஒரு பாகிஸ்தானியர் ரூ.1,00,000 (ஒரு லட்சம்) பாகிஸ்தான் ரூபாயுடன் இந்தியா வந்தால், அந்த பணத்தின் மதிப்பு ரூபாய் 30,024 மட்டும் தான். இதிலிருந்து, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு மிகவும் குறைந்துவிட்டது என்பதையும், இந்திய ரூபாய் அதன்மீது முன்னிலை வகிக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை கடந்த சில ஆண்டுகளாக மோசமடைந்து வருகிறது. பாகிஸ்தான் கடன் சுமையில் இருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி, தங்களது செலவுகளை நடத்தும் நிலையில் உள்ளது. இதனால், நாட்டின் நாணய மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. உணவு, எரிபொருள், மருத்துவம் உள்ளிட்ட தேவையான பொருட்களின் விலையேற்றம், மக்களின் வாழ்க்கையை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பணவீக்கம் அதிகரித்துவிட்டால், ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு குறையத் தொடங்கும். பாகிஸ்தான், அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்கிறது, ஆனால் அவற்றை ஏற்றுமதி செய்யும் திறன் மிகவும் குறைந்துள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் காண்கிறது.

பாகிஸ்தானில் அரசியல் நிலைமை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. தொடர்ந்து அரசியல் குழப்பங்கள், ஆட்சி மாற்றங்கள் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கின்றன. அரசியல் மையஸ்திரம் இல்லாத நாடுகளில், முதலீடுகள் குறையும், பொருளாதார வளர்ச்சி நின்றுவிடும். பாகிஸ்தானின் பொருளாதாரம் பல சர்வதேச நிறுவனங்களால் பாதுகாப்பாக இல்லை எனக் கருதப்படுகிறது. இதன் விளைவாக, வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்குள் வருவதற்கு தடையாக இருக்கிறது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் (IT), வங்கி, உற்பத்தி, விவசாயம், ஆராய்ச்சி ஆகிய துறைகள் வளர்ந்து வருகின்றன. இந்தியா மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்திய அரசு, பணவீக்கம் குறைவாக இருக்க பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்தியா பல்வேறு நாடுகளுக்கு வணிகம் செய்து வருவதால், நாட்டின் வருமானம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், நாணயத்தின் மதிப்பு உறுதியாக இருக்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தால், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் உயரும். இந்திய அரசாங்கம் பொருளாதார துறையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருவதால், எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.

ஒரு நாட்டின் நாணய மதிப்பு, அந்த நாட்டின் பொருளாதாரத்தின் நிலைப்பாட்டைக் காட்டுகிறது. இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் நிலையில், பாகிஸ்தான் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+