உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பல அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது..
குறிப்பாக கச்சா எண்ணெய் விலையானது கடந்த வாரத்தில் மிக மோசமான ஏற்றத்தினை கண்டது. இது இந்தியா போன்ற நாடுகளுக்கு மிக மோசமான விஷயமாகவும் பார்க்கப்பட்டது.
ஏனெனில் தனது மொத்த எண்ணெய் பயன்பாட்டில் பெருமளவில் இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகின்றது.இதன் காரணமாக வழக்கத்தினை விட கூடுதலாக எரிபொருளுக்காக செலவு செயும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பணவீக்க அச்சம்
இதற்கிடையில் பணவீக்கமானது ஏற்கனவே 6% அருகில் காணப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியினை காணலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எப்படியிருப்பினும் இன்று இந்திய சந்தையானது காலையில் சரிவில் தொடங்கினாலும், தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
தற்போதைய நிலவரம்?
இதற்கிடையில் இன்று காலை அமர்வில் 19 பைசா அதிகரித்து 76.25 ரூபாய் வரை அதிகரித்திருந்த ரூபாயின் மதிப்பானது, தற்போது (2.18 நிலவரப்படி) 76.59 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த அமர்வில் 76.43 ரூபாயாக முடிவடைந்திருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 76.34 ரூபாயாகவும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
நேற்று வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளில் ஆளும் கட்சியே 4 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. பஞ்சாப்பில் மட்டும் பெரும்பான்மை தொகுதியை ஆம் ஆத்மி வென்றுள்ளது. இதுவும் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாக அமையலாம். இதற்கிடையில் தான் ரூபாயின் மதிப்பானது இன்று காலை நேரத்தில் சற்று ஏற்றம் கண்டு காணப்பட்டது.
நீடிக்கும் பதற்றம்
எனினும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் முன்னணி நாடாக இருக்கும் இந்தியா, உக்ரைன் ரஷ்யா இடையே நீடித்து வரும் பதற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தையில் சமாதானம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்காததால் சந்தையில் மீண்டும் அழுத்தம் அதிகரித்துள்ளது.
தற்போதைய சந்தை நிலவரம்?
2.30 நிலவரப்படி, இந்திய சந்தையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தற்போது சென்செக்ஸ் 27.37 புள்ளிகள் அதிகரித்து, 55,491 புள்ளிகளாகவும், இதே 2.5 புள்ளிகள் குறைந்து, 16,592 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications