இந்த வார தொடக்கத்தில் இருந்தே, சென்செக்ஸ் நல்ல ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த வாரத்தின் மூன்றாவது நாளான இன்றும், சென்செக்ஸில் அந்த ஏற்றம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
நேற்று (20 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,544 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,767 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,976 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. தற்போது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 350 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,895 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
BSE சந்தை நிலவரம் என்ன?
சென்செக்ஸின் 30 பங்குகளில் 24 பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 06 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பி எஸ் இ-யில் மொத்தம் 2,636 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,504 பங்குகள் ஏற்றத்திலும், 966 பங்குகள் விலை இறக்கத்திலும், 166 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 97 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் பவர் கிரிட் கார்ப்பரேஷன், என் டி பி சி, டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. நெஸ்லே, டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ரிலையன்ஸ், ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஐரோப்பிய சந்தைகள்
நேற்று (20 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.48 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.19 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.33 % இறக்கத்திலும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (21 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் மற்றும் சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.