இன்றைய வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றால் மிகையில்லை. உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை அளித்து வரும் ஐடி துறை இந்த ஆண்டு மந்தமான வர்த்தகச் சூழ்நிலையில், செலவுகளைக் குறைக்கவும், லாப அளவீட்டை உயர்த்திக் காட்டவும் பிரஷ்ஷர்களை சேர்ப்பதை நிறுத்தியுள்ளது அல்லது பெரிய அளவில் குறைத்துள்ளது.
இப்படி ஒட்டுமொத்த டெக், ஐடி, டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் பல காரணங்களால் மோசமான நிலையில் முடக்கப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டில் நியூ ஏஜ் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் திவாலாகி விடக்கூடாது என்பதற்காக ஊழியர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பணி நீக்கம் செய்தது.

2023 ஆம் ஆண்டின் முதல் 3 காலாண்டில் மட்டும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்து சுமார் 28000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. 2023 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் அமெரிக்காவில் வங்கிகள் திவாலானதில் இருந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முதலீடுகள் மொத்தமாகக் கட்டானது.
இதனால் இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்து தங்களுடைய நிறுவனத்தைத் திவால் ஆகாமல் காப்பாற்றிக்கொள்ள கடுமையான மறுசீரமைப்பு நடவடிக்கையை எடுத்தனர். இதுமட்டும் அல்லாமல் அடுத்த 2 வருடத்திற்கு நிறுவனமும், சேவைகளும் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்க தேவையான ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு இயங்க முடிவு செய்தது.
இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த மோசமான பணிநீக்கத்திற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு, 2021 ஆம் ஆண்டில் அளவுக்கு அதிகமான ஊழியர்களைப் பணியில் சேர்த்தது. இதனால் 2021ல் 4080 ஊழியர்களும், 2022ல் 20000 ஊழியர்களும், 2023ல் 28000 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் உடான், பிசிக்ஸ்வாலா, பிசாங்கோ, Third Wave Coffee போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் எட்டெக், ரியல் மனி கேம், B2B பிரிவில் இருக்கும் நிறுவனத்தில் அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதில் அதிகப்படியாகப் பைஜூஸ் நிறுவனம் அக்டோபர் வரையிலான காலத்தில் சுமார் 2500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. அமேசான் 1500 பேரையும், ரிலையன்ஸ் B2B 1000 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளது. இப்படிச் சிறிதும், பெரிதுமாகப் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து ஜாப் இன்செக்யூரிட்டியை கொடுத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications