இந்திய டெக் நிறுவனங்களும், டெக் ஊழியர்களும் லாக்டவுன் காலத்தில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான சம்பள உயர்வு, அதிகப்படியான வேலைவாய்ப்புகள், மூன்லைட்டிங் வாய்ப்புகள் என ஒன்று 3 - 4 சம்பளம் பெற்று இருந்தனர். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் முதலீட்டு சந்தை வறண்டு போன காரணத்தால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்தியாவின் முன்னணி எட்டெக் நிறுவனமான பைஜூஸ் இந்த வாரம் 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் மறுசீரமைப்பு நடவடிக்கையும் சேர்த்து, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 30,000த்திற்கும் மேல் பணிநீக்கம் செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
2022 முதல் இன்று வரை, இந்தியாவில் ஏறக்குறைய 95 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 31,965 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக சந்தை தரவுகள் கூறுகிறது. இந்த பணிநீக்கத்தின் மூலம் பல நிறுவனங்கள் லாபத்தை கூட்டியும், வர்த்தகத்தை காப்பாற்றியும், பல நிறுவனங்கள் திவால் ஆகாமல் தப்பித்துள்ளது என்றால் மிகையில்லை.
ஆனால் பணிநீக்கத்தில் ஈடுப்பட்டு உள்ள 95 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பெரும்பாலானவை தேவைக்கும் அதிகமாக பணியாளர்களை பணியில் சேர்த்துள்ளது. இதனாலேயே அதிகப்படியான பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர், இது முற்றிலும் நிறுவனங்களின் தவறு என்றால் மிகையில்லை.

இந்த நிலையில் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் கடந்த சில மாதங்களில் பணிநீக்கங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் மீண்டும் வேலைவாய்ப்பு அளவுகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை எழுந்துள்ளது. ஆனால் 2023 ஆம் ஆண்டிலும் பணிநீக்கம் நடந்துள்ளது,
2023 ஆம் ஆண்டில் மட்டும், தோராயமாக 49 ஸ்டார்ட்அப்கள் கிட்டத்தட்ட 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த பணிநீக்கத்தை மிகவும் அமைதியான முறையில் நடத்தும் காரணத்தால், உண்மையான பணிநீக்கங்களின் எண்ணிக்கை வெளிவரவில்லை.
2022- 2023 ஆம் ஆண்டுகளில் அதிகளவில் பணிநீக்கத்தை எதிர்கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பது பைஜூஸ் தான். இந்த பணிநீக்கம் ஸ்டார்ட்அப் துறையில் குறையுமா உயருமா என்பது முதலீட்டு சந்தையின் வேகத்தை பொறுத்து அமையும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications