அதிர்ச்சியில் டெக் ஊழியர்கள்..! 29 நாளில் 15000 பேர் பணிநீக்கம்..!

தொழில்நுட்ப நிறுவனங்களில் நடைபெற்று வரும் பணிநீக்கங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொழில்துறையை சீர்குலைத்து வருகின்றன. இருப்பினும், 2023 இல் தான் பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டோம்.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டிலும் பணிநீக்கங்கள் தொடர்வது டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனத்திலும் பணிநீக்கங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் டெக் ஊழியர்கள்..! 29 நாளில் 15000 பேர் பணிநீக்கம்..!

அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் இன்க் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பல்வேறு துறைகளில் பணிநீக்கம் செய்தது. இதுவரை, 186 தொழில்நுட்ப நிறுவனங்கள் 49,386 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பிப்ரவரியில் பணிநீக்கங்களின் எண்ணிக்கை சிறிது குறைந்து இருந்தாலும், பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் பணி நீக்கங்கள் தொடரும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவில், தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்படுவதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம். இவை முக்கியமாக நிலையற்ற பொருளாதார தன்மை, வேகமாக மாறிவரும் வணிகங்களின் போக்கால் அமைகின்றன.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள் சில வகையான உள் மறுசீரமைப்புகளைச் செய்து வருகின்றன. அவர்களின் வணிக முன்னுரிமைகளில் தெளிவான மாற்றம் உள்ளது. இதன் மூலம் செலவு பிடித்த திட்டங்கள் கைவிடப்பட்டு ஆட்குறைப்புகளையும் தவிர்க்க முயற்சிக்கின்றனர்.

ஜெர்மன் சாப்ட்வேர் நிறுவனமான SAP இந்த ஆண்டு ஜனவரியில் அதன் மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவித்தது. இது அதன் ஊழியர்களில் 7 சதவீதத்துக்கும் மேலானவர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிறுவனம் கிளவுட்-மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மூலம் அதன் வளர்ச்சியை ஓரளவு துரிதப்படுத்த விரும்புகிறது. இதேபோல், எக்ஸ்பீடியா குழுமம் அதன் செலவு கட்டமைப்பை சீரமைக்கும் முயற்சியில் 1500 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

இதற்கு முக்கியக் காரணம் தொழில்துறையின் மந்தநிலை, தொழில்நுட்ப பங்கு விலைகளில் காணப்படும் பொதுவான சரிவு ஆகும். இது முதலீட்டாளர்களை எச்சரிக்கையாக முதலீடு செய்ய வைத்துள்ளது.

இந்தப் போக்கு பணிநீக்கங்களுக்கு வழிவகுத்தது. பிப்ரவரியில், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ, நிச்சயமற்ற வணிகச் சூழல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் மந்தமான தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சுமார் 4,250 பணியாளர்களில் 5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

நிதி செயல்திறனை மேம்படுத்துதல் குறைக்கப்பட்ட ஊதியச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, பணிநீக்கங்கள் ஒரு நிறுவனத்தின் லாப வரம்பை நேரடியாக மேம்படுத்தும்.

முதலீட்டாளர்கள் பொதுவாக அதிக லாப வரம்புகளைக் கொண்ட நிறுவனங்களை விரும்புகிறார்கள், இந்த விஷயத்தில், அத்தகைய ஆட்குறைப்புகள் ஒரு நிறுவனத்தின் மதிப்பை அதிகரிக்கக்கூடும்.

லண்டனை தளமாகக் கொண்ட ஆடம்பர ஈட்டெய்லர் Farfetch பிப்ரவரி 16 அன்று தனது ஊழியர்களில் 2000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. நிறுவனம், நிதி பலம் உள்ள நிலையில் இருந்து செயல்பட அனுமதிக்கும் வகையில் வணிகத்தை சீரமைக்க வேண்டும் என்று கூறி இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியது.

கொரோனா தொற்றுநோய் காலத்தின்போது அதிகப்படியான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அமேசான் மற்றும் மெட்டா உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததற்கு இது ஒரு பொதுவான காரணம்.

சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு, குறிப்பாக இ-காமர்ஸ் தொடர்பானவை, நிறுவனங்களை வேலைக்கு அமர்த்துவதற்கு வழிவகுத்தது. எப்படியிருந்தாலும், வேகமாக மாறிவரும் பொருளாதாரச் சூழலால் ஆட்குறைப்பு தேவைதான் என நிறுவனங்கள் கூறுகின்றன.

கொரானா காலத்துக்குப் பிந்தைய எழுச்சியைத் தொடர்ந்து, பல முதலீட்டாளர்கள் நிறுவனங்களிடமிருந்து அதிக செயல்திறனைக் கோரினர். இதன் விளைவாக, நிறுவனங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் நிதி செயல்திறனை மேம்படுத்துவதற்கும் செலவுக் குறைப்பு உத்திகளை கையாள வேண்டிய அழுத்தத்துக்கு ஆளாகின. இதன் விளைவாகவும் ஆட்குறைப்பு செய்யப்பட்டது.

Story Written by: I. Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+