இந்திய ஐடி சேவை துறை முதல் முறையாக 200 பில்லியன் டாலர் அளவிலான வருமான அளவீட்டைத் தாண்டி சாதனைப் படைத்துள்ளது. குறிப்பாக மென்பொருள் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான சேவையின் காரணமாக வருமானம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் இந்திய ஐடி துறை 2011ஆம் ஆண்டுக்குப் பின்பு சிறப்பான வளர்ச்சியை 2022ஆம் நிதியாண்டில் பதிவு செய்ய உள்ளதாக ஐடி துறை நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இந்திய டெக்னாலஜி துறை
2022ஆம் நிதியாண்டில் இந்திய டெக்னாலஜி துறையின் மொத்த வருவாய் அளவு முதல் முறையாக 200 பில்லியன் டாலரை தற்போது தாண்டியுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டின் முடிவுக்குள் அதன் அளவு 227 பில்லியன் டாலர் அளவீட்டை தொடும் எனக் கணித்துள்ளது நாஸ்காம்.
15.5 சதவீத வளர்ச்சி
இதோடு 2011ஆம் ஆண்டுக்கு பின்பு 2022ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி துறை சுமார் 15.5 சதவீதம் என்ற அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் மிக முக்கியமான வளர்ச்சி சாதனையாக நாஸ்காம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
4,50,000 வேலைவாய்ப்பு
2022ஆம் நிதியாண்டில் இந்திய டெக் துறை கூடுதலாக 30 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது, இதேபோல் 4,50,000 பேர் புதிதாக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு இந்திய ஐடி துறைக்குப் பிரேக்த்துரு ஆண்டாக அமைந்துள்ளது என நாஸ்காம் தலைவர் ரேகா எம்.மேனன் தெரிவித்துள்ளார்.
துறை வாரியான வருமானம்
இந்த ஆண்டு ஐடி சேவை துறை 116 பில்லியன் டாலரும், BPM துறை 44 பில்லியன் டாலரும், ER&D துறை 36 பில்லியன் டாலரும், வன்பொருள் துறை 17 பில்லியன் டாலரும், சாப்ட்வேர் ப்ராடெக்ட் பிரிவு 13 பில்லியன் டாலரும் வருமானமாகப் பெறும் என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி வர்த்தகம்
மேலும் நடப்பு நிதியாண்டில் இந்திய ஐடி துறையின் மொத்த ஏற்றுமதி அளவு 17.2 சதவீதம் வரையில் அதிகரித்து 178 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஏற்றுமதி வர்த்தகம் வாயிலாக மட்டுமே பெற்புள்ளது குறிப்பிடத்தக்கது. ஈகாமர்ஸ் துறை 39 சதவீத உயர்வில் 79 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications