13 ஆண்டு காலம் அமெரிக்காவில் வேலை செய்து வந்த ஒரு தொழில்நுட்ப நிபுணர் பெங்களூருக்கு குடும்பத்துடன் தான் இடம்பெயர இருப்பதாகவும் மாதம்தோறும் 3.5 லட்சம் ரூபாய் வாடகைக்கு பெங்களூருவில் தான் வீடு பார்ப்பதாகவும் வெளியிட்டு இருக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
ரெடிட் தளத்தில் ஒரு தொழில்நுட்ப நிபுணர் வெளியிட்டுள்ள பதிவில் நான் கடந்த 13 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு 39 வயது ஆகிறது, நான் பணி அழுத்தம் மிகுந்த வேலையிலிருந்து வெளிவர வேண்டும் குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தில் செலவிட வேண்டும் என விரும்புகிறேன். இதற்காக நான் அமெரிக்காவிலிருந்து பெங்களூருக்கு குடிபெயர விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பெங்களூருக்கு வர இருப்பதாகவும் மாதத்திற்கு 3.5 லட்சம் ரூபாய் வாடகைக்கு வீடு பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நான் வேலை வேலை என வேலைக்காகவே பெரும்பாலான நேரத்தை செலவிட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார்.
இப்போது என்னிடம் இந்தியாவில் வந்து வசிப்பதற்கு தேவையான நிதி இருக்கிறது. பகுதி அளவு வருமானம் வருவதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்து விட்டேன் எனவே நான் இந்தியாவிற்கு வந்து என் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
அதிக சம்பளம் தரக்கூடிய ஒரு வேலை வாய்ப்பை கைவிடுவது என்பது நிதி ரீதியாக எனக்கு சில சிக்கல்களை தரும் , ஆனால் இப்போது நான் என்னுடைய நலனுக்கும் என்னுடைய குடும்பத்தினரின் நலனுக்கும் தான் முக்கியத்துவம் தர விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். வர்தூர் பகுதியில் 4 படுக்கை அறை கொண்ட அப்பார்ட்மெண்ட் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஹைதராபாத் அல்லது புனே ஆகிய நகரங்களிலும் குடியமர தான் தயார் என கூறியிருக்கிறார்.
என்னுடைய மனைவி அமெரிக்காவை சேர்ந்தவர் , என்னுடைய பிள்ளைகளும் வெளிநாட்டவர் போலவே இருப்பார்கள் இந்திய சமூகமும் இந்திய பள்ளிகளும் அவர்களை எவ்வாறு கையாள போகின்றன என்பதை நினைத்தால் தான் சற்று குழப்பமாக இருக்கிறது என கூறி இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து தங்கி இருப்பவர் என்னென்ன சவால்களை சந்திக்கிறீர்கள் என்பதை தயவு செய்து எனக்கு கூறுங்கள் உங்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வேலையை விட்டுவிட்டு இந்தியா வருவதற்கு பதிலாக அமெரிக்காவிலேயே ஒரு புறநகர் பகுதியில் நீங்கள் வசிக்கலாமே என ஒரு பயனர் யோசனை தெரிவித்துள்ளார். நான் ஐரோப்பாவை சேர்ந்த பெண்மணி இந்தியாவிற்கு வந்ததிலிருந்து இங்கிருக்கும் மக்கள் என்னை பார்க்கும் பார்வை குறிப்பாக வித்தியாசமாக இருக்கிறது, இந்த மக்களோடு ஒருங்கிணைவது சவாலாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் . இங்கே இருக்கும் கலாச்சார வித்தியாசங்கள் உங்களுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சற்று பிரச்சினை ஏற்படுத்தலாம் ஆனால் சில நாட்களில் அவை சரியாக விடும் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications