இந்திய டெலிகாம் துறையின் முக்கிய மாநாடாகக் கருதப்படும் இந்தியன் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, உலக நாடுகளின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தொழிற்சாலை துவங்க இந்தியா மிகவும் விரும்பத்தக்க நாடாக மாறியுள்ள நிலையில், அடுத்தாக டெலிகாம் உபகரணங்களில் இந்தியா முன்னோடியாக இருக்க வேண்டும் என மோடி பேசினார்.
இதைத் தொடர்ந்து இந்திய டெலிகாம் துறையில் முக்கிய வளர்ச்சியாக அடுத்த 3 வருடத்திற்குள் இந்திய கிரமங்களுக்கு அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
1 பில்லியன் டெலிகாம் வாடிக்கையாளர்
இந்தியாவில் தற்போது 1 பில்லியனுக்கும் அதிகமான மொபைல் போன் பயன்படுத்தும் மக்கள் உள்ளனர், குறிப்பாக அதிவேக இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 750 மில்லியனையும் தாண்டியிருக்கும் நிலையில் இந்திய மக்கள் மத்தியில் டேட்டாவின் தேவை அதிகமாகியுள்ளது.
டெலிகாம் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த 4 வருடத்தில் மட்டும் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் 50 சதவீதம் இந்திய கிராம மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வரும் வேளையில் மேம்படுத்தப்பட்ட சேவை மிகவும் அவசியமாக உள்ளது.
அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க்
இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் பணிகளைத் துவங்க உள்ளதாகவும், இதேவேளையில் இந்திய கிராமங்களில் அதிகளவிலான வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கும் விதமாக அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க்-ஐ அமைக்கும் திட்டமிட்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.
குறைவான விலையில் டேட்டா
உலகிலேயே இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் டேட்டா சேவை அளிக்கப்படும் காரணத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் இண்டர்நெட் பயன்படுத்தித் தங்களது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கிக்கொள்கின்றனர்.
விலை குறைவாக இருக்கும் காரணத்திற்காகவும் டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications