இந்திய டெலிகாம் துறையின் முக்கிய மாநாடாகக் கருதப்படும் இந்தியன் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, உலக நாடுகளின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தொழிற்சாலை துவங்க இந்தியா மிகவும் விரும்பத்தக்க நாடாக மாறியுள்ள நிலையில், அடுத்தாக டெலிகாம் உபகரணங்களில் இந்தியா முன்னோடியாக இருக்க வேண்டும் என மோடி பேசினார்.
இதைத் தொடர்ந்து இந்திய டெலிகாம் துறையில் முக்கிய வளர்ச்சியாக அடுத்த 3 வருடத்திற்குள் இந்திய கிரமங்களுக்கு அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
1 பில்லியன் டெலிகாம் வாடிக்கையாளர்
இந்தியாவில் தற்போது 1 பில்லியனுக்கும் அதிகமான மொபைல் போன் பயன்படுத்தும் மக்கள் உள்ளனர், குறிப்பாக அதிவேக இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 750 மில்லியனையும் தாண்டியிருக்கும் நிலையில் இந்திய மக்கள் மத்தியில் டேட்டாவின் தேவை அதிகமாகியுள்ளது.
டெலிகாம் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த 4 வருடத்தில் மட்டும் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் 50 சதவீதம் இந்திய கிராம மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வரும் வேளையில் மேம்படுத்தப்பட்ட சேவை மிகவும் அவசியமாக உள்ளது.
அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க்
இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் பணிகளைத் துவங்க உள்ளதாகவும், இதேவேளையில் இந்திய கிராமங்களில் அதிகளவிலான வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கும் விதமாக அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க்-ஐ அமைக்கும் திட்டமிட்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.
குறைவான விலையில் டேட்டா
உலகிலேயே இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் டேட்டா சேவை அளிக்கப்படும் காரணத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் இண்டர்நெட் பயன்படுத்தித் தங்களது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கிக்கொள்கின்றனர்.
விலை குறைவாக இருக்கும் காரணத்திற்காகவும் டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications