சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச் நிறுவனத்தின் (Centrum) புதிய அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்கள் 63 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரம் முன்னோக்கி செல்வதை சுட்டிக்காட்டுகிறது.
தற்போது, இந்தியாவில் சுமார் 31,800 தனிநபர்கள் ஒரு ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பாதிக்கின்றனர். இது கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல ஒரு ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 10 லட்சம் நபர்களை எட்டியுள்ளது.

ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 58,200 ஆக அதிகரித்து, 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பணக்கார இந்தியர்களின் வருமானம் வேகமாக அதிகரித்து வருகிறது. 2019 முதல் 2024-ஆம் நிதியாண்டுக்கு இடையில், ரூ. 50 லட்சத்திற்கு அதிகமான வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 49 சதவீதம் அதிகரித்து 58,200 ஆகவும், ரூ.100 மில்லியனுக்கு மேல் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரித்து சுமார் 31,800 ஆகவும் உள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் மொத்த வருமானம் கடந்த 5 ஆண்டுகளில் 64 சதவீதம் அதிகரித்து ரூ.49 லட்சம் கோடியாக உள்ளது. 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்களின் வருமானம் 2019 முதல் 2024-ஆம் நிதியாண்டுக்கு இடையில் 121 சதவீதம் அதிகரித்து, 38 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. 5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் வருமானம் 106 அதிகரித்து, ரூ.40 லட்சம் கோடியாக உள்ளது.
இந்தியாவில் உள்ள ஹை நெட் வொர்த் (HNI) மற்றும் அல்ட்ரா ஹை நெட் வொர்த் தனிநபர்களின் (UHNI) ஒருங்கிணைந்த சொத்துக்கள் 2023-ஆம் ஆண்டில் 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2028-ஆம் ஆண்டிற்குள் 2.2 டிரில்லியன் டாலராக உயரும் என்றும், ஆண்டுதோறும் 13 முதல் 14 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் அறிக்கை கணித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அதிக வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவின் பொருளாதார உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் செல்வம் வேகமாக வளர்ந்து வருவதையும் சுட்டிக் காட்டுகிறது. இனிவரும் காலங்களிலும் இந்தியாவில் அல்ட்ரா ஹை நெட் வொர்த் மற்றும் ஹை நெட் வொர்த் கொண்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications