இந்திய ரயில்வே: 2025ல் செம டார்கெட்.. வருமானத்தில் 14 சதவீதம் உயருமாம்..!!

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் அதன் மூலம் வரும் வருவாய் 2025 நிதியாண்டில் 14 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் ஆவணங்களின்படி 2025 நிதியாண்டில் பயணிகள் டிக்கெட் வருவாய் ரூ.80,000 கோடியாக உயரும் என இலக்கு வைக்கப்பட்டு உள்ளது, இது கடந்த ஆண்டில் ரூ.70,000 கோடியாக இருந்தது. அதேவேளையில் சரக்குப் போக்குவரத்து மூலம் வருவாய் இந்த நிதியாண்டில் தேக்கம் அடையும் என கணிக்கப்பட்டு உள்ளது. 2025 நிதியாண்டில் சரக்குப் போக்குரவரத்து வருவாய் ரூ.1,74,500 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில், கடந்த ஆண்டு ரூ.1,74,590ஐக் காட்டிலும் சற்றேக் குறைவாக உள்ளது.

கடந்த ஆண்டு சாதனை அளவாக சரக்குப் போக்குவரத்து மூலம் வருவாய் இருந்தாலும் அதில் நிலக்கரி போக்குவரத்துமூலம் பெருமளவு வருமானம் வந்தது. சாலை, விமானம், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மூலம் ஏற்படும் போட்டி காரணமாக வழக்கமான பிற பொருட்களின் போக்குவரத்து குறைவாக இருக்கும் எனத் தெரிகிறது. பட்ஜெட் கணக்கும் பயணிகள் டிக்கெட் கட்டணத்தைக் குறைப்பதால் கிடைக்கும் வருவாயும் ஒரு காரணமாக இருக்கிறது.

இந்திய ரயில்வே: 2025ல் செம டார்கெட்.. வருமானத்தில் 14 சதவீதம் உயருமாம்..!!

2024 நிதியாண்டில் இந்திய ரயில்வே எப்போதும் இல்லாத வகையில் 1591 மில்லியன் டன் அளவிலான சரக்குகளை ரயில்வே துறையின் சரக்குப் போக்குவரத்து பிரிவு கையாண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரயில்வே வருமானம் 2.73 லட்சம் கோடி ரூபாய் ஆக இருக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
இது முந்தைய அண்டைக் காட்டிலும் 5 சதவீதம் அதிகமாகும்.

இதனிடையே விபத்து தடுப்பு கவச் அமைப்புக்காக பட்ஜெட்டில் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய ஹைஸ்பீடு ரயில் திட்டம், எலக்ட்ரிக் இன்ஜின்கள் தயாரிப்பு, ரயில் பெட்டிகளுக்காகவும் நிதி அதிகளவில் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கவச் அமைப்புக்காக ரூ.1,112.57 கோடி 2025 நிதியாண்டுக்காக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் இது இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.557.96 கோடியைவிட அதிகம் என்று கூறியுள்ளார்.

2024 நிதியாண்டைப் போலவே இந்த நிதியாண்டிலும் ரயில்வே பாதுகாப்பு திட்டத்துக்காக ரூ.45,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.08 டிரில்லியன் ரூபாய் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் கூறியுள்ளார். இது கவச் அமைப்பு, சிக்னல் அமைப்புகள் மேம்பாடு, பழைய இருப்புப் பாதைகளை மாற்றுதல் போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

அண்மையில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துகளால் ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இது தவிர 1600 ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்படுகிறது. 38,000 ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படுகிறது. இது இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 46 சதவீதம் அதிகமாகும். கூடுதலாக டிரான்ஸிட் சார்ந்த மேம்பாட்டுத் திட்டம் 14 பெரிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.

Story written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+