2022-23 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையை 99 சதவீதம் பேர் தாக்கல் செய்த நிலையில், பல முக்கியமான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக கொரோனா தொற்றுக்கு பின்பு பலர் பல நிறுவனங்களுக்கு மாறிய நிலையில் பெரும்பாலானோரின் சம்பளம் உச்சத்தை அடைந்துள்ளது.
2022-23 நிதியாண்டில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவதற்காக சுமார் 2.69 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர், இது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய 2018-19 ஆண்டை ஒப்பிடுகையில் 49.4 சதவீதம் அதிகமாகும்.

வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் தரவுகளின்படி 2022-23 நிதியாண்டில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி 2.69 லட்சம் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இது 2021-22 ஆம் நிதியாண்டில் 1.93 லட்சமாகவும், 2018-19 ஆம் நிதியாண்டில் 1.80 லட்சமாகவும் உள்ளது.
இதேநேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் கொண்டவர்கள் தாக்கல் செய்யும் வருமான வரி அறிக்கைகளின் எண்ணிக்கை 1.4 சதவீதம் வரையில் மட்டுமே அதிகரித்துள்ளது. இப்பிரிவில் 2022-23 ஆம் நிதியாண்டில் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துடன் அறிக்கை தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 4.97 கோடி, 2021-22 ஆம் நிதியாண்டில் 4.75 கோடி, 2020-21 ஆம் நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 5.68 கோடியாகும்.
மாநில வாரியாக பார்க்கும் போதும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சுமார் 1.12 கோடி பேர் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர், உத்தர பிரதேசத்தில் இதன் எண்ணிக்கை 75.72 லட்சமாக உள்ளது, குஜராத்தில் இருந்து 75.62 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 50.88 லட்சம் பேரும் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கொண்டவர்களாக தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 0.3 சதவீதமாக உள்ளது. இதே மொத்த வருமான வரி அறிக்கையில் 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்டவர்களின் அளவு 72.6 சதவீதமாகும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications