இந்தியாவில் அடுத்த 5 வருடத்திற்கான நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19, 2024 முதல் துவங்கி நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 4, 2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இத்தேர்தல் மூலம் நாட்டின் டெக் துறை வளர்ச்சிக்கான முக்கியமான திட்டம் தடைபெற்றுள்ளது எத்தனை பேருக்குத் தெரியும். ஒட்டுமொத்த உலகமும் ஏஐ துறை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் போது, இத்துறைக்காக அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் தற்போது தேக்கம் அடைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற மிக முக்கியமானது இந்த India AI Mission திட்டம். மத்திய அரசு ₹10,372 கோடி ரூபாய் மதிப்பிலான India AI Mission திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ், பொது-தனியார் கூட்டு முயற்சியின் மூலமாக 10,000 GPUக்களை அரசு நிறுவனங்கள் செயல்பாட்டில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், உலக அளவில் GPUக்களை நிறுவனங்களும், அரசாங்க நிறுவனங்களும் பெருமளவில் பயன்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவை முன்னேற்றுவதற்காக ₹10,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் கிராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட் (GPU) தயாரிப்பாளரான என்விடியா (Nvidia) உடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இந்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியானது.
இதற்கு மத்தியில் என்விடியா தலைவர் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவுக்கு நேரில் வந்து அரசு அதிகாரிகளையும், பல தலைவர்கள், தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
GPU எதற்காக: GPU என்பது கிராபிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை வேகமாக செயல்படுத்தக்கூடியது. முதலில் இத்தகைய GPU-க்கள் கேமிங் விளையாடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது AI துறையின் உயிர்நாடியாக உள்ளது. கணினி செயல்பாடுகளை வேகமாக செய்யக்கூடிய மைக்ரோசிப் தான் இந்த GPU. இந்த துறையில் என்விடியா நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
மத்திய அரசு இலக்கு: India AI Mission மூலம் செய்யப்படும் ஒப்பந்தத்தின் மூலம் என்விடியா நிறுவனத்திடம் இருந்து மலிவு விலையில் GPUக்களை பெற்று, இந்திய ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பயனர்களுக்கு மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
தற்போது இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், தேர்தலுக்கு பிறகு இது குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்றும் விபரம் அறிந்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், GPU சந்தையில் என்விடியா நிறுவனம் பெரும்பான்மை பங்கை கொண்டிருப்பதால், இந்திய அரசுக்கு இந்நிறுவனம் சிறந்த தேர்வாக இருக்கும்.
உலகளாவிய போட்டி: செயற்கை நுண்ணறிவு துறையில் கணினி கட்டமைப்பை உருவாக்குவது என்பது உலக நாடுகளுக்கு இடையே ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு தேவைகளுக்காக கணினி திறனை மேம்படுத்தப் பல பில்லியன் டாலர்களை செலவிட்டு வருகின்றன.
எடுத்துக்காட்டாக, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே என்விடியா நிறுவனத்தின் சக்தி வாய்ந்த H100 சிப்கள் உட்பட பல்வேறு வகையான GPUக்களை வாங்கத் தொடங்கிவிட்டன. சீனாவுக்கு இந்த சக்தி வாய்ந்த சிப்புகள் கிடைப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க அரசு பல தடைகளை விதித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
GPU தயாரிப்பில் என்டிவிடியா நிறுவனத்தைப் போல் யாரும் இல்லாத நிலையில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.16 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள்-க்கு அடுத்தபடியாக என்விடியா உள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ், டாடா, yotta போன்ற நிறுவனங்கள் என்விடியா உடன் ஒப்பந்தம் செய்து சக்தி வாய்ந்த ஜிபியூ-க்களை வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications