இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு 2023-24 நிதியாண்டில் ரூ.21,083 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 32 சதவீதம் கூடுதலாகும். இந்தத் தகவலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தனியார் துறை மற்றும் பாதுகாப்பு பொது துறை நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் ஆர்டர்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார். இந்திய பாதுகாப்புத்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ராஜ்நாத் சிங் செய்த பதிவில்,
சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து ₹21000 கோடியைத் தாண்டியுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்திய பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது என்றுள்ளார்.
ஒரு மாதத்துக்கு முன்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய பாதுகாப்பு உற்பத்தியின் திறன் ஆத்மநிர்பார் பாரத்தை பிரதிபலிப்பதாகப் பாராட்டி கூறினார். நமது மொத்த பாதுகாப்பு உற்பத்தி ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்றார்.
பாதுகாப்பு இறக்குமதியாளரிலிருந்து ஏற்றமதியாளரான இந்திய பயணம்- இந்தியா தனது பாதுகாப்பு உற்பத்தி திறன்களை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்ததுள்ளதை காட்டுகிறது.
பாதுகாப்பு அமைச்சகம் முந்தைய ஆண்டு பாதுகாப்பு ஏற்றுமதியில் ஒரு எழுச்சியைக் கண்டதன் மூலம் வரலாற்று வெற்றியைப் பெற்றது. எல்சிஏ-தேஜாஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், விமானம் தாங்கிகள் மற்றும் பலவற்றில் இந்திய பாதுகாப்புத் தயாரிப்புகளில் உலகளாவிய ஆர்வம் அதிகரித்ததன் மூலம் ஏற்றுமதியில் உயர்வு ஏற்பட்டது.
இந்தியா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்புத் தயாரிப்புகளை 85 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, அதன் பாதுகாப்புத் துறையின் வலிமையைக் காட்டுகிறது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதுகாப்புத் தயாரிப்புகளை தீவிரமாக ஏற்றுமதி செய்கின்றன. 155 மிமீ மேம்பட்ட பீரங்கி துப்பாக்கிகள், பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications