சென்னை: இந்தியாவில் புழங்கும் ரூபாய் நோட்டுகளில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நோட்டுகளில் ஒன்று ரூ. 100 ரூபாய் நோட்டு. இந்தக் கட்டுரையில், 100 ரூபாய் நோட்டில் காணப்படும் முக்கிய தகவல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி காண்போம். இது போன்ற விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வதால் போலியான கள்ள நோட்டுகளை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ,புதிய லாவெண்டர் நிற 100 ரூபாய் நோட்டு. சரி 100 ரூபாய் நோட்டில் என்னவெல்லாம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் பார்த்ததுண்டா?

மக்களிடையே நம்பிக்கை பெறுவதற்கும், கள்ள நோட்டை எளிதாக கண்டறிவதற்கும் இதில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. தற்போது உங்கள் கைகளில் ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
1. மகாத்மா காந்தியின் முகம் அச்சடிக்கப்பட்டுள்ள பக்கம்தான் நோட்டின் முன்பக்கம். ஒரு 100 ரூபாய் நோட்டு 142mm நீளமும், 66mm அகலமும் கொண்டது.
2. காந்திஜியின் படத்திற்கு கீழ் மகாத்மா காந்தி என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளது. நோட்டின் வலதுபுறம் வெற்றிடமாகக் காணப்படும். அதில் மகாத்மா காந்தியின் வாட்டர் மார்க் இருக்கும். அதை வெளிச்சத்தில் பார்த்தால் அது நன்றாக தெரியும். இந்த வாட்டர் மார்க் தெரிவதில் வித்தியாசம் காணப்பட்டால் அந்த நோட்டு கள்ளநோட்டாக இருக்க வாய்ப்புள்ளது.
3. அதைத்தொடர்ந்து நோட்டின் இருபுறமும் நோட்டின் மதிப்பான 100 என்ற எண் எழுதப்பட்டிருக்கும். அதையும் வெளிச்சத்தில் நம்மால் பார்க்க முடியும். நோட்டின் குறுக்கே ஒரு கோடு போல் உள்ளதை பாதுகாப்பு நூல் என்று அழைக்கிறார்கள். இந்த பாதுகாப்பு நூலில் ஒரு பக்கத்தில் இடைவெளி விட்டும் மறுபுறத்தில் நீளமாகவும் காணப்படும். மைக்ரோ எழுத்துகளில் 'ஆர்பிஐ', 'பாரத்' (தேவ்நகரியில்), என்று எழுதி இருக்கும். அதனை வெளிச்சத்தில் பிடித்து பார்த்தால் அந்த பாதுகாப்பு நூல் ஒரு ஒற்றை கோடாக தெரியும்.
5. பார்க்கும்போது பச்சை நிறமாக தெரியும் அந்த கோடு சற்று நோட்டை ஆட்டிப் பார்த்தால் நீல நிறமாக தெரியும்.
4 நோட்டின் பின்புறத்தில் குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற படிக்கிணறு (stepwell) 'ராணி கி வாவின்' சித்திரம் இடம் பெற்றுள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த படிக்கிணறு, ராணி உதயமதி என்பவரால் அவரது கணவருக்கு நினைவுச் சின்னமாகக் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இந்த சித்திரத்தைப் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் "Rani Ki Vav" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.
5. பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதாக கண்டறிய சாய்ந்த கோடுகள் நூறு ரூபாய் நோட்டில் உள்ளது. இந்த அடையாளம் உயர்ந்து இருக்கிற வகையில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. விரல்களை வைத்து தொட்டுப் பார்த்தால் இதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். மகாத்மா காந்தியின் உருவப்படம், அசோகத் தூண் சின்னம், வலது மற்றும் இடது பக்கங்களில் நான்கு கோண கோடுகள், மைக்ரோ-டெக்ஸ்ட் 100 உடன் உயர்த்தப்பட்ட முக்கோண அடையாளக் குறி ஆகியவையும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவுகிறது.
6. 15 மொழிகளில் நோட்டின் பின்புறம் 100 ரூபாய் என்று எழுதப்பட்டுள்ளது. அதில் தமிழ் 13வது இடத்தில் தமிழ் உள்ளது. இந்த நோட்டை வைத்திருக்கிற நபருக்கு, நூறு ரூபாய் வழங்க தயார் என்ற ஒரு உறுதி மொழியில் "I promise to pay the bearer sum of one hundred Rupees" என்று எழுதி ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து இருக்கும்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications