இந்தியாவிற்கு வரும் முதல் ஹைப்பர் லூப் ரயில்.. மணிக்கு 1200 வேகம்.. விமானத்தை விட ஃபாஸ்ட் இதான்.!!

விமானத்தை விட இரண்டு மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர்லூப் ரயில், இந்தியாவில் சோதனைக்கு தயாராக உள்ளது. இதை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மணிக்கு 1,200 கிமீ வேகம் வரை செல்ல முடியுமாம்.

விமானத்தை விட வேகமாக நிலத்தில் பயணம் செய்வதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா? நிமிடங்களில் பல கிலோமீட்டர்களைக் கடந்து உங்கள் இலக்கை அடைய வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இப்போது இந்தியாவில் இந்தப் புரட்சி சாத்தியமாகப் போகிறது. ஹைப்பர்லூப் ரயில்கள் கற்பனைக்கும் எட்டாத வேகத்தை எட்டப் போகிறது. இவை இந்தியாவில் சோதனை ஓட்டம் செய்யப்பட உள்ளன. நாடு முழுவதும் 410 கி.மீ தொலைவில் சோதனை ஓட்டத்திற்கு ஹைப்பர் லூப் பாதை தயாராக உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை நிறைவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் எக்ஸ் தளத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்

இந்தியாவிற்கு வரும் முதல் ஹைப்பர் லூப் ரயில்.. மணிக்கு 1200 வேகம்.. விமானத்தை விட ஃபாஸ்ட் இதான்.!!

ஹைப்பர்லூப் ரயில் என்றால் என்ன?: ஹைப்பர்லூப் என்பது குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் வழியாக அதிக வேகத்தில் பயணிக்க உதவும் தொழில்நுட்பமாகும். காற்றை வெளியேற்றிய பிறகு இந்த அழுத்தக் குழாயில் ஸ்டீல் குழாய்கள் வைக்கப்படுகின்றன. காந்த விசையால் குறைந்த அழுத்தக் காற்றால் நிரப்பப்பட்ட இந்தக் குழாய் வழியாக பயணிக்கும் பாட் தள்ளப்படுகிறது. பாட் என்பது ரயில்களில் உள்ள போகி போன்ற சிறிய கேப்சூல் வடிவிலான வாகனம் ஆகும்.

குழாயின் உராய்வில்லாத இயக்கம் 1,200 கிமீ/மணி வரை பயணிக்க உதவுகிறது. ஆனால் இந்திய ரயில்வேயின் ஹைப்பர்லூப் அமைப்பின் அதிகபட்ச வேகம் மணிக்கு 600 கி.மீ ஆகும். பின்னர், 1,200 கி.மீ ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சோதனைக் கட்டத்தில், மணிக்கு 100 கி.மீ வேகம் சோதிக்கப்படுகிறது. பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கும் இந்த பாட் பயன்படுத்தப்படலாம்.

மும்பை-புனே 25 நிமிட அதிவேக ஹைப்பர்லூப் ரயில் பயணம் தொலைதூர நகரங்களைக் கூட நிமிடங்களில் இணைக்கும். ஹைப்பர்லூப் ரயில்கள் புல்லட் ரயில்களை விட வேகமானது. முதல் ஹைப்பர்லூப் ரயில் மும்பையில் இருந்து புனே வரை செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப வேகம் மணிக்கு 360 கிமீ ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாதாரண ரயில்கள் மும்பையிலிருந்து புனேவை அடைய 3-4 மணிநேரம் எடுக்கும் என்றும், ஹைப்பர்லூப் ரயில் அதே தூரத்தை கடக்க 25 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது ஆகாயத்தில் பறப்பதை விட வேகத்தை கொண்டது. அதே நேரத்தில், ஹைப்பர் லூப் ரயில் டிக்கெட்டுகள் விமான டிக்கெட்டுகளை விட அதிகமாக இருக்காது. கட்டணங்கள் விமானக் கட்டணங்களைப் போலவே இருக்கும். ஹைப்பர் லூப் ரயிலின் மற்றொரு அம்சம் என்னவென்றால், ஒரே நேரத்தில் நான் ஸ்டாப் பயணத்தை அனுபவிக்க முடியும். ஒரு இடத்திலிருந்து பயணம் தொடங்கினால், இலக்கை அடையும் வரை நிறுத்தம் இல்லை.

2013 ஆம் ஆண்டில், எலோன் மஸ்க் ஹைப்பர்லூப் என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். இது ஒரே நேரத்தில் 24-28 நபர்களை ஒரு ரயிலில் கொண்டு செல்ல முடியும் . தற்போது ஹைப்பர்லூப் சோதனை தடம் ஐஐடி மெட்ராஸின் தையூரில் உள்ள டிஸ்கவரி வளாகத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஹைப்பர்லூப் டிராக் என்பது ஐஐடி மெட்ராஸில் உள்ள ஆவிஷ்கர் ஹைப்பர்லூப் குழு மற்றும் இன்ஸ்டிட்யூட்டின் ஸ்டார்ட்அப் TuTr ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இந்தியாவில் ஹைப்பர்லூப் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+