டெல்லி: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு குறியீடாகத்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி என்பது பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கிறதா அல்லது சரிவை சந்தித்திருக்கிறதா என்பன உள்ளிட்டவற்றுக்கான ஒரு ரிப்போர்ட் கார்டாக தான் ஜிடிபியை பார்க்கிறோம்.
ஜிடிபி: அந்த வகையில் வெவ்வேறு நாடுகளின் பொருளாதாரங்களை ஒப்பிடுவதற்கும் ஜிடிபி தான் பயன்படுத்தப்படுகிறது. ஜிடிபி என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த சந்தை மதிப்பை குறிக்கும் ஒரு அளவீடாகும் . இந்தியாவை பொறுத்தவரை 2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கணிப்புகளை எல்லாம் மீறி வலுவான ஜிடிபி வளர்ச்சியை கொடுத்து அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

வலுவான ஜிடிபி வளர்ச்சி: மத்திய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2026 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீதம் என வளர்ச்சி அடைந்திருக்கிறது. பல்வேறு அமைப்புகளும் இந்தியாவின் முதல் காலாண்டு ஜிடிபி என்பது 6 முதல் 7 சதவீதத்திற்குள் தான் இருக்கும் என கூறின. இந்திய ரிசர்வ் வங்கி கூட இந்தியாவின் ஜிடிபி 6.5% ஆகத்தான் இருக்கும் என கணிப்பு வெளியிட்டிருந்தது . ஆனால் அவற்றையெல்லாம் கடந்து முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீதமாக வளர்ந்திருக்கிறது.
5 காலாண்டுகளில் இல்லாத உயர்வு: இதுவே 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.5 சதவீதமாக தான் இருந்தது. அதே போல இந்த முறை நாமினல் ஜிடிபியும் 8.8 சதவீதம் என வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 5 காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி அதிகபட்ச வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
என்னென்ன துறைகள் காரணம்: இந்தியாவின் இந்த ஜிடிபி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது கட்டுமானம் மற்றும் வேளாண்மை துறை. இந்த துறைகள் வலுவான செயல்பாட்டை காட்டி இருக்கின்றன. அதேபோல சரக்கு போக்குவரத்து, உற்பத்தி உள்ளிட்டவையும் உயர்ந்திருப்பதும் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது . மத்திய அரசும் தன்னுடைய மூலதன செலவினத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 52% உயர்த்தி இருக்கிறது .
டிரம்ப் வரி: எச்டிஎப்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக இருக்கும் சாக்சி குப்தா இந்தியாவில் கட்டுமானம் மற்றும் வேளாண்மை ஆகிய இரண்டு துறைகளும் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார் அதேபோல சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி 5.9 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஜிஎஸ்டி வரி: அடுத்தது அமெரிக்க அரசின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்தியாவிற்கு ஒரு சவாலான சூழலை உண்டாக்கி இருக்கிறது என கூறும் பொருளாதார நிபுணர்கள், ரிசர்வ் வங்கி எடுக்கக்கூடிய வட்டி குறைப்பு நடவடிக்கைகள், சாதகமான பருவமழை காலம் மற்றும் ஜிஎஸ்டி வரி திருத்தம் ஆகியவை அடுத்தடுத்த காலாண்டுகளில் மக்களிடையே நுகர்வு போக்கை அதிகரிக்கச் செய்யும் இது பல்வேறு பொருட்களின் உற்பத்திக்கான தேவை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications