ஈரான் போர் காரணமாக இந்தியாவில் ஏற்பட்டிருக்கக் கூடிய எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கிறது. நாம் வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் தொடங்கி ஹோட்டல்கள், ஆலைகளில் பயன்படுத்தும் எல்பிஜி வரை இந்தியா தனக்கு தேவையான சுமார் 60% எல்பிஜியை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது.
இந்தியாவுக்கு சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகள் தான் எல்பிஜி விநியோகம் செய்கின்றன. இங்கே எல்பிஜி கப்பல்களில் நிரப்பப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அவை சிலிண்டர்கள் மூலம் நமக்கு விற்பனை செய்கின்றன. இந்த எல்பிஜி போக்குவரத்துக்கு முக்கியமானதாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் போர் காரணமாக கப்பல் போக்குவரத்து முடங்கி நிற்கிறது.

இதனால் தான் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டீக்கடைகள், உணவகங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டு இருக்கின்றன. செயல்படும் சில உணவகங்களிலும் தோசை ,ஆம்லெட் , மீல்ஸ் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு வெரைட்டி ரைஸ், இட்லி, பொங்கல் உள்ளிட்டவை மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருப்பதால் வணிக பயன்பாடு சிலிண்டர் டெலிவரியை நிறுத்தி வைத்திருக்கின்றன.

நிலைமை இப்படி இருக்கும் நிலையில் 2 எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வருவதற்கு வழிவகை செய்தது மத்திய அரசு. மீதமுள்ள கப்பல்களை கொண்டு வருவதற்கும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அது மட்டும் நாட்டின் எல்பிஜி தட்டுப்பாட்டை தீர்த்துவிடுமா என்றால் இல்லை. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் தடையின்றி கிடைக்கும், ஆனால் நிறுவனங்கள், உற்பத்தி ஆலைகள் நிலை அவ்வளவு தான்.
தொழில்கள் , உற்பத்தி பாதிப்பது நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தையே முடங்க செய்துவிடும். எனவே மத்திய அரசு வளைகுடா நாடுகளை விடுத்து மாற்று நாடுகளில் இருந்து எல்பிஜி கொள்முதலை அதிகப்படுத்தியுள்ளதாம். எப்படி கச்சா எண்ணெய் பிரச்சினையை ரஷ்யா மூலம் தீர்த்ததோ அதே போல எல்பிஜி பிரச்சினையை அமெரிக்கா மூலம் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திற்கு சராசரியாக 3 மில்லியன் மெட்ரிக் டன் எல்பிஜி தேவைப்படுகிறது. எனவே போர் முடியும் வரை பிரச்சினையை தீர்க்க இந்தியா அமெரிக்க எல்பிஜி கொள்முதலை அதிகரித்துள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி கூறுகிறது. எஸ்&பி குளோபல் எனர்ஜி வெளியிடும் தகவலின்படி இந்தியாவுக்குத் தேவையான எல்பிஜி-இல் தற்போது 41 % தான் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது மீதமுள்ள 59% நாம் இறக்குமதி தான் செய்ய வேண்டும். இதில் வளைகுடா நாடுகளிலிருந்து தற்போதைக்கு எல்பிஜி வரத்து சீராகாது என தெரிந்துவிட்டது. எனவே அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து அதிக கொள்முதல் தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க எல்பிஜி ஏற்றுமதி பாரம்பரிய வளைகுடா நாட்டு சப்ளையர்களை விட அதிகமாக இருக்கிறது என எஸ்&பி குளோபல் எனர்ஜி தகவல் கூறுகிறது. மார்ச் 5ஆம் தேதி இந்தியாவில் வாராந்திர எல்பிஜி இறக்குமதி 3,22,000 மெட்ரிக் டன்களாக இருந்தது, இது மார் 19ஆம் தேதிக்கான வார முடிவில் 2,65,000 மெட்ரிக் டன்னாக குறைந்திருக்கிறது. இதில் 89,000 டன்கள் மட்டுமே வளைகுடா நாடுகளிலிருந்து வந்திருக்கிறது. மீதமுள்ள அனைத்தும் அமெரிக்கா போன்ற மாற்று நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் இந்தியாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து 2.2 மில்லியன் மெட்ரிக் டன்கள் எல்பிஜி-ஐ இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றிருக்கின்றன. 2026இன் முதல் இரண்டு மாதத்திலேயே இந்தியா 4, 80,000 மெட்ரிக் டன் எல்பிஜி-ஐ அமெரிக்காவில் இருந்து கொள்முதல் செய்துள்ளதாம். மார்ச் மாதத்தில் இது இன்னும் அதிகரித்துள்ளது என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்!! வந்துவிட்டது LPG ATM..!! 2 நிமிஷத்துல சிலிண்டர்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாடு: 2 கப்பல்களில் வந்த எல்பிஜி நாட்டின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்யுமா?

முதல்ல LPG சிலிண்டரை சரண்டர் செய்யவும்.. அரசின் உத்தரவால் அதிர்ச்சி.. யாருக்கெல்லாம் சிக்கல்..?!

தீவிரமடையும் ஈரான் போர்: ஓமன் வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா!! அடுத்தது என்ன?

LPG தட்டுப்பாடு: 24 மணிநேரம் கெடு.. வந்தது புது ரூல்ஸ்.. அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல்..!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

மக்களே உஷார்! மார்ச் 31-க்குள் e-KYC முடிப்பது கட்டாயம்? ஆன்லைனில் எப்படி எளிதாக அப்டேட் செய்யலாம்?

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

பாஜக அரசின் தவறான முடிவுகளே LPG சிலிண்டர் பற்றாக்குறைக்கு காரணம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..!

வதந்தியை நம்பாதீங்க: சிலிண்டர்களுக்கு பற்றாக்குறையே இல்லை! எரிவாயு அமைச்சகம் அதிரடி விளக்கம்?

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!



Click it and Unblock the Notifications

