நம் நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி கணிசமான அளவு நடைபெறுகிறது. இருப்பினும் அது உள்நாட்டு தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இதனால் இறக்குமதி வாயிலாக தேவையின் பெரும் பூர்த்தி செய்யப்படுகிறது. அரபு நாடுகள், ரஷ்யா, அமெரிக்கா உள்பட பல நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. நடப்பு மே மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
18 லட்சம் பேரல்கள்
கெப்லரின் கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ESPO பிளன்ட் போன்ற அதிக இலகுரக கிரேடுகளை அதிகளவு வாங்கியுள்ளன. இதனையடுத்து இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு 18 லட்சம் பேரல்களாக அதிகரிக்கும். இது 10 மாதங்களில் இல்லாத அதிகபட்சஅளவாகும்.

இஎஸ்பிஓ பிளன்ட் என்பது ரஷ்ய கச்சா எண்ணெய் ஒரு குறிப்பிட்ட தரமாகும். உயர் தரம் மற்றும் குறைந்த கந்தக உள்ளடக்கததிற்கு பெயர் பெற்றது. கிழக்கு ரஷ்யாவின் கோஸ்மினோ துறைமுகத்திலிருந்து ஆசிய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கொண்டு செல்லும் கிழக்கு சைபீரியா-பசிபிக் பெருங்கடல் (ESPO)எண்ணெய் குழாயின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
ஆர்டர்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் பயன்பாட்டில் நம் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த வாரம் ஜூன் மாதத்தில் ஏற்றப்படும் இஎஸ்பிஓ கச்சா எண்ணெய்யை 10க்கும் மேற்பட்ட சரக்குகளுக்கு ஆர்டர் செய்தனர். இதனால் இலகுரக ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான வலுவான தேவை ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஆலோசனை நிறுவனமான ரைஸ்பாட் எனர்ஜியின் மூத்த எண்ணெய் ஆய்வாளர் ஜெய் ஷா கூறுகையில், நாட்டின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எம்ஆர்பிஎல்-ல் கச்சா எண்ணெய் வடிகட்டுதல் அலகுகள் மூடல்கள், சாதகமான லாப வரம்புகளில் திரவ வினையூக்கி கிராக்கர்ஸ்கான (எஃப்சிசி) இறக்குமதி தேவைகளை அதிகரித்துள்ளன.
சிக்கா துறைமுகம்
இந்திய சுத்திகரிப்பு ஆலைக்காக மேற்கு சிக்கா துறைமுகத்திற்கு வரும் சரக்குகள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். சீன அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட கச்சா எண்ணெய்யை தொடர்ந்து புறக்கணிப்பதாலும், சீன சுயாதீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கான கச்சா எண்ணெய் ஒதுக்கீடுகள் இறுக்கமாக இருப்பதாலும் இந்தியாவுக்கு கூடுதல் இஎஸ்பிஓ வழங்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியா அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதால், சீனாவிற்கான இஎஸ்பிஓ விலைகளை ரஷ்யா உயர்த்தியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
More From GoodReturns

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!



Click it and Unblock the Notifications