ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட் விநியோகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இது அனைவரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமி தரிசனத்திற்கு சென்றவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கேட்டுகொண்டுள்ளது. அதேபோல், ஆந்திர முதல்வர் என் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தன்னை ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்று கூறியுள்ளார்.
நாட்டில் பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளன. கோவில், மசூதி, சர்ச் என மக்கள் அதிகம் வழிபடும் புண்ணிய ஸ்தலங்கள் நாடு முழுவதும் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த சூழலில் அவற்றின் சொத்துமதிப்புகள் என்ன என்பது சிலருக்கும் தெரியாத ஒரு கேள்வியாகவே உள்ளது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் உள்ள கோவில்கள் எண்ணிக்கை என்ன? அவற்றில் பணக்கார கோவில்கள் எது? அவற்றின் நிகர மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
சமீபத்திய மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் சுமார் 2 மில்லியன் கோயில்கள் உள்ளன, மேலும் புதிய கோயில்களின் கட்டுமானம் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் 9 பணக்கார கோவில்கள் உள்ளன. அவை எந்தெந்த கோவில்கள் மற்றும் நிகர மதிப்புகளை காணலாம்.
முதலாவதாக ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. கேரளாவில் உள்ள இந்த விஷ்ணு கோவில் இந்தியாவிலேயே பணக்கார கோவில் என்று கூறப்படுகிறது இதன் சமீபத்திய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெட்டகங்கள், தங்க ஆபரணங்கள், விலை மதிப்பற்ற ரத்தினங்கள் உள்ளிட்ட ஆகியவற்றை கொண்டுள்ளது. எனவே இதன் மதிப்பு சுமார் ரூ.1.20 லட்சம் கோடி மதிப்புடையதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக திருமலை திருப்பதி வெங்கேடஸ்வரர் கோவில், உலகின் பணக்கார மற்றும் மிகவும் பிரபலமான வழிபாட்டு தலமான திருப்பதி கோவில் ஆந்திராவில் அமைந்துள்ளது இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கம் மற்றும் பணத்தை நன்கொடை அளித்து வருகின்றனர். இதனால் கோவிலின் செல்வமும் அதிகரிக்கிறது. இதன் நிகர மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது. இதன் ஆண்டு வருமானம் மட்டும் ரூ.1400 கோடியாக உள்ளது.
வைஷ்ணோ தேவி கோவில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் திரிகூட மலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வைஷ்ணோ தேவி கோவில் இந்து தெய்வமான துர்காதேவியை கொண்டதாகவும், இதில் புனித யாத்திரை ஆனது பல பக்தர்களை இங்கு வர செய்கிறது.இந்த கோவிலிலும் பகதர்கள் நன்கொடை காரணமாக இதன் நிகர மதிப்பு சுமார் ரூ.500 கோடியாக உள்ளது.
ஷீரடி சாய்பாபா கோவில் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் அனைத்து மதத்தினரையும் வழிபட செய்கிறது. இதனால் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே இதன் நிகர மதிப்பு ரூ.320 கோடி என மதிப்பிடப்படுகிறது.
பொற்கோவில் அமிர்தசரஸ் பஞ்சாபில் அமைந்துள்ளது. சீக்கிய ஆலயம் அதன் கில்டட் குவிமாடம் மற்றும் அமைதியான ஒளி சமூக சேவையை குறிக்கிறது. இதில் ஏராளமான நன்கொடைகள் குவிகின்றன. இங்கு அனைவருக்கும் இலவச உணவும் வழங்கப்படுகிறது. இதன் நிகர மதிப்பு ரூ.500 கோடி ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி கோவில் இதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது திராவிட கட்டிடகலைக்கு பெயர் பெற்றது. இதில் பார்வதிதேவி மற்றும் சிவபெருமானுக்காக அர்பணிக்கப்பட்ட இந்த கோவில் பக்தர்களை அதிகளவு ஈர்த்து வருகிறது.
குருவாயூர் கோவில் இதன் மதிப்பு சுமார் ரூ.2500 கோடி ஆகும். கேரளாவில் உள்ள குருவாயூர் கோவில் 5000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கிருஷ்ணர் சிலை உள்ளது. இந்த ஏராளமான பக்தர்களை ஈர்த்து வருகிறது.

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்னாதர் கோவில் இதன் நிகர மதிப்பு ரூ.150 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையில் அமைத்துள்ள சித்தி விநாயகர் கோவில் சுமார் ரூ.125 கோடி நிகர மதிப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கக்குவிமாடத்தின் கீழ் விநாயக பெருமான் அமைக்கப்பட்டுள்ளார். இங்கு ஏராளமான நன்கொடைகள் வருகின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications