மும்பை: இந்தியாவில் அண்மை காலமாக அடிக்கடி விமானங்களில் கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பன உங்களிடம் செய்திகளை நாம் அதிகம் காண முடிகிறது. குறிப்பாக கடந்த மாதம் ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்ததிலிருந்து விமானங்கள் தொடர்பான செய்திகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே அதன் என்ஜின் செயலிழந்து இருக்கிறது. இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் டெல்லியில் இருந்து கோவா நோக்கி புறப்பட்ட நிலையில் திடீரென அது அவசர அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது. என்ஜின் செயலிழந்ததே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

புதன்கிழமை அன்று 6E 6271 என்ற இண்டிகோ நிறுவன விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. டெல்லியில் இருந்து கோவாவை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென விமானத்தின் ஒரு என்ஜின் செயலிழந்து போனது. உடனடியாக சுதாரித்து கொண்ட விமானிகள் அருகில் மும்பை சர்வதேச விமான நிலையம் இருப்பதை அறிந்து உடனடியாக தகவல் அளித்தனர்.
மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானிகள் ஒரு என் ஜினை வைத்து விமானத்தை இயக்கி சாமர்த்தியமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கினர். விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதனை அடுத்து வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அதில் கோவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முன்னதாக டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்ட இண்டிகோ விமானம் பார்ட்னா விமான நிலையத்தின் தரையிறங்கும் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஓடுபாதை வருவதற்கு முன்னதாகவே விமானிகள் விமானத்தை தர இயக்கிய நிலையில் ஓடு பாதையின் நீளம் போதுமானதாக இல்லை என்பதை உணர்த்து மீண்டும் விமானத்தை டேக் ஆப் செய்தனர்.
இதனை அடுத்து வானத்திலேயே மூன்று முறை வட்டமிட்டு பின்னர் பாதுகாப்பாக ஓடு பாதையில் தரையிறக்கினர். இந்த விமானத்தில் பயணம் செய்த 173 பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பினர் . விமானிகளின் துரித செயல்பட்டால் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த மாதம் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டது. சில வினாடிகளிலேயே விமானம் அங்கேர் இருந்த கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. என்ஜின்களுக்கான எரிபொருள் செல்லும் சுவிட்ச் நடுவானில் அணைக்கப்பட்டதால் எரிபொருள் செல்லாமல் என்ஜின்கள் செயலிழந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications