சென்னை: இந்தியாவில் விமானம் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்துமே வேகமாக மக்கள் கவனம் பெறுகின்றன. இதற்கு காரணம் அண்மையில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து என கூறலாம். இந்த விபத்தை அடுத்து மக்கள் மத்தியில் விமான பயணம் என்றாலே அச்சம் ஏற்படுகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு ஒரு மோசமான அனுபவம் கிடைத்திருக்கிறது. விமானி இல்லாததன் காரணமாக இண்டிகோ நிறுவனத்தில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏர் இந்தியா விமான விபத்தை அடுத்து மக்கள் மத்தியில் விமான பயணம் தொடர்பாக அச்சம் எழுந்துள்ளது.

இந்த அச்சத்தை போக்க வேண்டியது விமான சேவை நிறுவனங்களின் கடமை. ஆனால் அதற்கு மாறாகவே சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. சென்னையில் இருந்து பாட்னாவுக்கு புறப்படக்கூடிய இண்டிகோ விமானத்தை இயக்குவதற்கு விமானி இல்லாததன் காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மாத்ருபூமி தளத்திற்கு இந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி அளித்த தகவலின் மூலம் இந்த விவரம் வெளியாகி இருக்கிறது.
இண்டிகோவுக்கு சொந்தமான 6E 539 விமானம் கொச்சியிலிருந்து புறப்பட்டு இருக்கிறது. இந்த விமானம் பாட்னாவை நோக்கி செல்ல வேண்டியது. சென்னை விமான நிலையத்தில் இடை நிறுத்தமாக விமானத்தை இறக்கியுள்ளனர். காலை 11 மணி அளவில் விமானத்தை நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதனை அடுத்து சென்னையில் இருந்து பாட்னா செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்துள்ளனர்.
இந்த சூழலில் திடீரென விமான சேவை நிறுவனம் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கும்படி கேட்டு இருக்கிறது. பயணிகள் காரணம் கேட்டதற்கு விமானத்தை இயக்குவதற்கு தற்போது விமானி இல்லை என பதில் அளித்துள்ளனர். பயணிகள் உடனே விமானத்தில் இருந்து இறங்கியுள்ளனர். மீண்டும் எப்பொழுது விமானம் இயக்கப்படும் என்ற தகவல் வழங்கப்படவில்லையாம். பயணிகள் அனைவருமே சுமார் 2 மணி நேரம் சென்னை விமான நிலையத்திலேயே காத்திருந்திருக்கின்றனர்.
பின்னர் 1.15 மணியளவில் இந்த இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து பாட்னாவை நோக்கி புறப்பட்டு இருக்கிறது. விமானி இல்லாத காரணத்தால் விமான பயணிகள் 2 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications