டெல்லி- கோவா இடையிலான விமான சேவையில், விமானத்தில் பயணிகளுக்காக இன்-ஃபிளைட் பொழுதுபோக்கு சேவையின் சோதனையை நடத்தப்போவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் தனது ஆப் மூலம் இந்தப் பொழுதுபோக்கு சேவையை சோதனை செய்ய உள்ளது.
மே 1 ஆம் தேதியிலிருந்து முதன்முறையாக அதன் வாடிக்கையாளர்களுக்காக இந்த பொழுதுபோக்கை இண்டிகோ விமான நிறுவனம் அளிக்கிறது.

மூன்று மாதம் நடைபெறும் இந்த பரிசோதனையின்போது பயணிகள் இண்டிகோ ஆப்பின் மூலம் கன்டன்ட்களை கண்டு களிக்கலாம்.
விமானம் உச்சபட்ச உயரத்தை அடைந்தவுடன் இந்த சேவை தொடங்கும். இதன்மூலம் விமானத்தின் எலக்ட்ரானிக்ஸ் இன்டர்பேஸ் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். பயணிகள் தங்களது சொந்த ஹெட்போன்கள் மூலம் கன்டன்ட்களை கேட்கலாம்.
இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தால் பயணிகளின் பயணம் இனிதாக அமைய முழு அளவில் பொழுதுபோக்கு சேவையை அளிக்கும். 350 விமானங்கள் தினமும் 2000 சேவைகளுடன் இண்டிகோ தனது வாடிக்கையாளர்கள் பயணம் திருப்திகரமாக இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
டெல்லி- கோவா தடத்தில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவை இண்டிகோ நெட்வொர்க்கின் பரந்த சேவையை மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு இந்திய அரசு அளிக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கதாக இருக்கிறது என்று இன்டர் குளோப் குரூப் நிர்வாக இயக்குநர் ரஜத் பாட்டியா கூறியுள்ளார். இன்டர் குளோப் இண்டிகோ விமான நிறுவனத்தின் தாய் நிறுவனமாகும்.
இது பற்றி ரஜத் பாட்டியா மேலும் கூறுகையில், எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் இதுபோன்று விமானப் போக்குவரத்துத் துறைக்கு இந்திய அரசு வசதிகளைச் செய்ததில்லை. விமானநிலைய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கம், விமானப் பயணத்துக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.
விமானப் பயணம் பற்றிய அரசின் பார்வை மாறியுள்ளது. பணக்காரர்களுக்கே ஆன சேவை என்ற மனப்போக்கு மாறிவிட்டது. நாட்டின் இன்ப்ராஸ்ட்ரக்சரின் முக்கிய அங்கமாக இப்போது விமானப் போக்குவரத்து பார்க்கப்படுகிறது.
இதனால் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பயணிகளின் பொழுதுபோக்குக்காக இண்டிகோ அறிமுகப்படுத்தவுள்ள சேவை நிச்சயம் அவர்களைக் கவரும் என்றார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications