இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் மேகியை விட அதிக சோடியம் இருப்பதாக இன்புளுயன்சர் ஒருவர் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
உணவுப் பொருள் தொடர்பான ஆய்வாளர் ரேவந்த் ஹிமாத்சின்ஹா, இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் உள்ள உப்பின் அளவை ஆய்வு செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பல்வேறு இடங்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை ருசித்து அந்த உணவுப் பொருட்களை மதிப்பாய்வு செய்து வீடியோ வெளியிடுபவர் ரேவந்த் ஹிமாத்சின்ஹா. இவர் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் போர்ன்விடாவில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்து மதிப்பாய்வு செய்தார்.
இதனை அடுத்து அந்த நிறுவனத்திடம் சர்க்கரையின் அளவை குறைக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வு இணையதளத்தில் பெருமளவில் வைரலானது. இந்த நிலையில் அவர் தற்போது இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவை மதிப்பாய்வு செய்துள்ளார்.
இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உப்புமா, அவல் போகா, தால் உள்ளிட்ட உணவுகளை ஆய்வு செய்ததில் அதிக உப்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். மேகி தான் அதிக சோடியம் நிறைந்த உணவு என்பது நம்மில் பலருக்கு தெரியும்.

ஆனால் இண்டிகோவில் வழங்கப்படும் உப்புமாவில் மேகியை விட 50 % உப்பு அதிகமாக உள்ளது, அவலில் மேகியை விட 83 % உப்பு அதிகமாக உள்ளது என்றும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதே போல தாலில் கூட அதிக உப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என அவர் தன்னுடைய வீடியோ பதிவில் கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இண்டிகோவில் பயணம் செய்பவர்கள் வீட்டிலேயே உணவை சமைத்து பேக் செய்து கொண்டு செல்லலாம் அல்லது அதற்கு பதிலாக பாதாம் உள்ளிட்ட நட்ஸ்களை வாங்கி உண்ணலாம் என பரிந்துரை செய்துள்ளார்.
விமானத்தில் பயணம் செய்யும் போது நமக்கு அதிகப்படியான உப்பு இருப்பது ஏன் என்று தெரிவதில்லை என்றால், உயரத்தில் பறக்கும் போது நம்முடைய நாக்கில் ருசி உணர்வு குறைவாக இருக்கும் என்றும் இதன் காரணமாகவே விமான நிறுவனங்கள் உணவில் அதிக உப்பினை போடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரேவந்த் ஹிமாத்சின்ஹாவின் இந்த வீடியோவுக்கு இண்டிகோ நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. அதில் இண்டிகோ நிறுவனம் எப்பொழுதும் பிரஷ்ஷான உணவினையே பயணிகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
FSSAI விதிகளின் படியே தங்களது உணவுகளில் பொருட்கள் சேர்க்கப்படுவதாக கூறியுள்ளது. அனைவரது கருத்துகளையும் பெற்று அதன் அடிப்படையில் எங்கள் சேவைகளை மேம்படுத்துவதையே நாங்கள் விரும்புகிறோம் என்றும் இண்டிகோ நிறுவனம் தங்களது அறிக்கையில் விளக்கம் தந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications