பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அமெரிக்கா- சீனா மத்தியிலான வர்த்தகப் பிரச்சனை வெடிக்கத் துவங்கிய பின்னர்ச் சீனா அரசு அமெரிக்கா நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்ட பின்பு செமிகண்டக்டர் துறையில் புதிய முதலீடுகளையும், வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஆனால் 48 வருடத்திற்கு முன்பே மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு உலகிலேயே மிகப்பெரிய செமிகண்டக்டர் சக்தியாக உருவெடுக்கும் திட்டத்தை 1976 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த மாபெரும் திட்டத்தைப் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவை இந்தியாவில் செமிகண்டக்டர் டிசைன் மற்றும் உற்பத்திக்காக Semiconductor Complex Limited என்ற அரசு நிறுவனத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் அறிவிக்கும் போது தற்போது Semiconductor powerhouse ஆக இருக்கும் தைவான், இஸ்ரேல், கொரியா, சீனா ஆகியவை களத்திலேயே இல்லாத போது எடுக்கப்பட்ட மாபெரும் திட்டமாகும்.
இந்திரா காந்தி திட்டமிட்டபடி 100 சதவீத பங்குகளையும் அரசு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அரசு நிறுவனமாக Semiconductor Complex Limited என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு உற்பத்தி பணிகள் துவங்கியது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செமிகண்டக்டர் சக்தி தெரியாமல் இருக்கும்போது இந்தியா முன்னோடியாக இந்தத் தொழிற்சாலையை அமைத்தது.
ஆனால் இந்திரா காந்தியின் மாபெரும் கனவு பிப்ரவரி 7 ஆம் தேதி 1989 ஆம் ஆண்டுத் தூள் தூளாய் உடைந்தது. பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி-யில் அமைக்கப்பட்டு இருந்த இந்தத் தொழிற்சாலையில் மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள், பல டன் அளவிலான மூலப்பொருள் எரிந்து நாசமானது.

இதனால் 1989 காலகட்டத்திலேயே சுமார் 60 முதல் 75 கோடி ரூபாய் வரையிலான இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது, இந்த விபத்து குறித்துப் புலனாய்வு அமைப்பு (IB) நேரில் சென்று பல கட்ட ஆய்வு, விசாரணையை நடத்தியும், தீ விபத்துக்கான காரணத்தை இன்று வரையில் கண்டறிய முடியவில்லை. இந்தத் தீவிபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு CISF அமைப்பு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்தத் தீ விபத்திற்குப் பின்பு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின்பு 1997 ஆம் ஆண்டு Semiconductor Complex Limited இயங்க துவங்கியது. ஆனால் அரசு திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை, 2000ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டது. 2006ல் இந்த நிறுவனம் இந்திய விண்வெளி துறையின் Semiconductor Lab எனப் பெயரிடப்பட்டு R&D பிரிவாக இயங்கி வருகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications