உலகின் மிகப்பெரிய பாமாயில் சப்ளையர் நாடான இந்தோனேஷியா-வில் இதன் உற்பத்தி குறைந்துள்ளதால் அந்நாட்டு மக்களுக்குப் போதுமான பாமாயில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏற்றுமதியை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன் படி உள்நாட்டில் விற்கப்படும் ஒவ்வொரு டன்னுக்கும் வெளிநாட்டிற்குக் குறைந்த அளவிலான ஏற்றுமதியை மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாட்டை ஜனவரி 1 முதல் பாமாயில் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாட்டை இந்தோனேஷியா அரசு விதிக்க உள்ளது.
இதன் மூலம் போதுமான உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என வெள்ளிக்கிழமையன்று இந்தோனேசிய நாட்டின் அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா
இந்தோனேஷிய நாட்டின் அரசு தற்போது விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளின் படி தனது உள்நாட்டு விற்பனை அளவில் 6 மடங்கு மட்டுமே உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இது ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், தற்போது 8 மடங்கு வரையில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கணக்கீடு
உதாரணமாக இந்தோனேஷியாவில் 100 லிட்டர் பாமாயில் விற்பனை செய்யப்பட்ட டிசம்பர் 31 வரையில் 800 லிட்டர் ஏற்றுமதி செய்யப்படலாம், ஆனால் ஜனவரி 1 முதல் 600 லிட்டர் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும் இதனால் சர்வதேச சந்தையில் பெரும் தட்டுப்பாடு உருவாகி சமையல் எண்ணெய் அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
உள்நாட்டு விநியோகம்
இந்தோனேஷிய மக்களுக்குப் போதுமான பாமாயில் விநியோகத்தில் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்தே இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு உள்ளது எனக் கடல் மற்றும் முதலீட்டு விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி செப்டியன் ஹரியோ செட்டியோ கூறினார்.
சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய் இருப்பு மற்றும் அவற்றின் விலை உள்ளிட்ட உள்நாட்டு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் அமைச்சர் செப்டியன் ஹரியோ செட்டியோ கூறினார்.
சமையல் எண்ணெய் விலை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனேசியாவில் சமையல் எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டிஸ் கொண்டு வர பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டது. இதில் முக்கியமான பாமாயில் பொருட்களின் மீதான ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்தது மறக்க முடியாது, அதன் மூலம் இந்தியாவில் சமையல் எண்ணெய் மீதான விலை உயர்வும் பெரும் பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியது.
ரமலான் பண்டிகை
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட முஸ்லீம் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தோனேஷியா மார்ச் 2023 இல் ரமலான் பண்டிகையைக் கொண்டாட உள்ளது. இப்பண்டிகையின் போது அங்குச் சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் தேவை பொதுவாக உயரும், இதை உறுதிய செய்யவே பாமாயில் ஏற்றுமதியை ஜனவரி 1 முதலே குறைக்க உள்ளது.
இந்தியா
இந்தோனேஷியா-வின் இந்த முடிவு கட்டாயம் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையை அதிகரிக்கும், மேலும் இறக்குமதி பாமாயில் நம்பியிருக்கும் அனைத்து நிறுவனங்களும் இதன் மூலம் பாதிக்கும், தயாரிப்புகளின் விலையை அதிகரிக்கும்.
2023ல் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனக் கூறப்படும் நிலையில், சமையல் எண்ணெய் விலையில் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications