ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டில் குடியேறுவதற்கு என்று தனிப்பட்ட சட்டங்கள் இருக்கும். இதை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம். அப்படி குடியேற்றச் சட்டங்களை மீறும் சுற்றுலா பயணிகளுக்கான அபராதங்களை அதிகரிக்கும் கடுமையான விசா விதிமுறைகளை இந்தோனேசியா அமல்படுத்தியுள்ளது. டைம் ஆப் இந்தியா அறிக்கையின் படி முன்பு ஒரு வருடம் வரை இருந்த தண்டனை, இப்போது 20 ஆண்டுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய அரசாங்கம் அமல்படுத்தியுள்ள புதிய விதிகள்:
கடுமையான தண்டனைகள்: முன்பு விசா மீறல்களுக்கான சிறைத் தண்டனை 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை இருந்தது. ஆனால் இப்போது அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

அரசாங்கத்தின் அணுகுமுறை: இந்தோனேசியாவின் குடியேற்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் சுற்றுலாப் பயணிகள் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதிலும் இந்தோனேசியாவின் அசைக்க முடியாத செயல்பாட்டை இந்த ஒழுங்குமுறை மாற்றம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆபரேஷன் ஜாக்ரதாரா: இந்தோனேசிய குடிவரவுத் துறையானது ஆபரேஷன் ஜாக்ரதாரா என்பதைத் தொடங்கியுள்ளது, இது குறிப்பாக விசா விதிமுறைகளை அமல்படுத்தவும் வெளிநாட்டு பயணிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட முயற்சிகளின் காரணமாக இந்த ஆண்டு குடியேற்ற கொள்கைகளை மீறியதற்கு 400 நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தை மதிக்கும் பயணிகளுக்கான பாதுகாப்பு: வழக்கமாக 30 முதல் 60 நாட்கள் வரையிலான விசா நீட்டிப்புகளை பயன்படுத்தும் வெளிநாட்டு பயணிகளை இந்த புதிய விசா நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.
குடிவரவு அதிகாரிகளின் அதிகரிப்பு: இந்தோனேசியாவில் அடிக்கடி பலரும் வரும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பாலியில் 125 குடிவரவு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகளின் இருப்பு பாலியின் நற்பெயரை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பார்வையாளர்கள் சட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்கிறது.
அதிகாரிகள் 20 ஜீப்புகள் மற்றும் 20 மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி தீவில் தீவிரமாக ரோந்து செல்வார்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை திறம்பட கண்காணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குடிவரவுப் பணியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஆபத்தான குற்றவாளிகளிடமிருந்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் குடிவரவு இயக்குனரக ஜெனரல் சில்மி கரீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய விதிமுறைகள் விசா மீறலை குறிவைப்பது மட்டுமல்லாமல், இந்தோனேசியாவிற்குள் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பயணிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் மேலும் குடியேற்ற சோதனைச் சாவடிகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த புதிய சோதனைச் சாவடிகள், நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் நபர்களை மிகவும் திறமையாக கண்காணிக்க அரசாங்கத்திற்கு உதவும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications