சென்னை: தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தொழில் பூங்காக்களை அமைப்பதற்கான பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட இரண்டு தொழில் பூங்காக்களும் தோல் அல்லாத காலணி உற்பத்தியில் கவனம் செலுத்தும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. லெதர் அல்லாத காலணி உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என மாநில தொழில்துறை திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே பெரம்பலூரில் இத்தகைய தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டு அவை வெற்றிகரமாக செயல்படுகின்றன. இதனை முன்மாதிரியாக கொண்டு ஆலைகளை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது.
அண்மையில் தைவானை சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஆலைகளை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. எனவே தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் புதிதாக அமைய இருக்கும் தொழில் பூங்காக்கள் முழுக்க முழுக்க லெதர் அல்லாத காலணி உற்பத்தியில் கவனம் செலுத்தும் என தெரிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைய இருக்கும் தொழில் பூங்கா புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. எனவே இங்கே லெதர் அல்லாத காலணி உற்பத்தி ஆலைகளை நிறுவினால் இது மூன்று மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் என தமிழ்நாடு தொழில் துறை கருதுகிறது.
அதேவேளையில் திருவெரும்பூர் மற்றும் மணப்பாறையில் அமைய இருக்கும் சிப்காட் தொழில் பூங்காக்கள் பொறியியல் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்துமாம். ஏற்கனவே ஜபில் என்ற ஒரு பன்னாட்டு நிறுவனம் திருச்சி மாவட்டத்தில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்களுடைய ஆலையை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த ஆலை நிறுவப்படும் பட்சத்தில் இந்த பகுதியில் ஐந்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் பல்வேறு பொறியியல் நிறுவனங்கள் மணப்பாறை சிப்காட் தொழில் பூங்காவில் தங்களுடைய ஆலைகளை நிறுவுவதற்கு கேட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
ருச்சி மாவட்டத்தின் இரண்டாவது தொழில் பூங்கா திருவெரும்பூர் சிப்காட். இது கூடிய விரைவில் அமைக்கப்படும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமிக்கு அருகிலேயே அமைகிறது. இந்த தொழில் பூங்காவிற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தீவிர படுத்தியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதே போல திருவாரூர் மாவட்டத்தில் ஒரு உணவு பூங்காவும் கரூர் மாவட்டத்தில் ஒரு டெக்ஸ்டைல் பூங்காவும் நிறுவுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் தொழில் பூங்காக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே குவிந்திருக்காமல் பரவலாக்கப்பட்டால் அது மாநிலம் முழுவதும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications