உலக நாடுகளைப் பயமுறுத்தி வரும் பணவீக்கம் தற்போது இந்தியாவைப் பயமுறுத்தத் துவங்கியுள்ளது என்பது தான் உண்மை, ஆர்பிஐ சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசிடமும் அறிவிக்காமல் ரெப்போ விகிதத்தை உயர்த்திய நாளில் இருந்து பணவீக்கம் குறித்த அச்சம் அரசுக்கும் சரி மக்களுக்கும் சரி அதிகரித்துள்ளது.
இந்தப் பயத்தை அதிகரிக்கும் விதமாக அமெரிக்காவில் பண பலம் படைத்த முன்னணி நிறுவனங்களாக டெஸ்லா, மெட்டா உட்படப் பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் போதும் இந்திய வர்த்தகச் சந்தையில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பீதியை அதிகரித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளாகப் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் ஜூன் பணவீக்க தரவுகள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், நேபாள்
இலங்கை, பாகிஸ்தான், நேபாள் ஆகியவை பொருளாதாரச் சிக்கலில் சிக்கியது முதல் மோடி அரசு இந்தியாவின் நிதிநிலையே சரிபார்க்கும் பணிகளைத் துவங்கியது.
மத்திய அரசு
இதன் முதல் படி தான் கடந்த மாதம் நடந்த முக்கியமான கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் நிதிநிலை, கடன், ஜிடிபி தரவுகளின் அப்டேட்களைத் திரட்டி எந்த மாநிலங்கள் அதிகப்படியான ஆபத்தில் இருக்கிறது என்பதைப் பட்டியலிட்டு வெளியிட்டது.
இலங்கை பணவீக்கம்
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள தரவுகள் படி திவாலாகியிருக்கும் இலங்கை நாட்டின் ஜூன் பணவீக்கம் 54.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐஎம்எப் இலங்கைக்குக் கடன் கொடுக்க விலைவாசி உயர்வு, ஊழல் குற்றங்கள் குறித்துக் கேள்வி எழுப்பிய இதே நாளில் தான் பணவீக்க தரவுகள் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலை குறியீடு
வரலாற்றில் முதல் முறையாகக் கொழும்பு நுகர்வோர் விலை குறியீடு (CCPI) 50 சதவீதத்தைத் தாண்டி 54.6 சதவீதம் என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது. இன்றளவும் இலங்கை மக்கள் எரிபொருள், மின்சாரப் பற்றாக்குறையால் அதிகப்படியான தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் பணவீக்கம்
இதேபோல் பாகிஸ்தான் நாட்டின் ஜூன் பணவீக்கம் வெளியாகி கூடுதலான அதிர்ச்சியை அளித்துள்ளது, மே மாதம் 13.7 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 21.3 சதவீதமாக உள்ளது. இது 2008 டிசம்பர் மாதத்தின் 23.3 சதவீத அளவீட்டை காட்டிலும் சற்று குறைவானது.
பாகிஸ்தான் டீ
பாகிஸ்தானில் கிராமப்புறத்தில் பணவீக்கம் 23.5 சதவீதமாகவும், நகரப்புறத்தில் 19.8 சதவீதமாகவும் உள்ளது. பாகிஸ்தான் அரசு தன் நாட்டின் அன்னிய செலாவணி இருப்பைக் காத்துக்கொள்ள மக்களை டீ குடிப்பதைக் குறைத்துக்கொள்ள அறிவித்துள்ளது அந்நாட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் அதிர்ச்சி அளித்தது.
நேபாள் பணவீக்கம்
இதேபோல் நேபாள் நாட்டின் ஜூன் பணவீக்க தரவுகள் வெளிவராத நிலையில் மே மாதத்தில் 69 மாத உயர்வான 7.87 சதவீத அளவை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே மே மாதம் நேபாள் நாட்டின் பணவீக்கம் 3.65 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பணவீக்கம்
இந்தியாவின் மே மாத பணவீக்கம் 7.04 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாத தரவுகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஜூன் மாதத்திற்கான உற்பத்தி PMI குறியீடு 53.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இந்தச் சரிவு உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டது தான்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications