இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் இக்காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு சம்பளம் உயர்வில் தாமதம், வேரியபிள் பே குறைப்பு என பல பிரச்சனைகளில் எழுந்த நிலையில் 20000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்ப்பதாக அறிவித்தது பெரும் நம்மதியை கொடுத்துள்ளது.
இதேபோல் ஏஐ துறையில் அதிகப்படியான கவனத்தை செலுத்த இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தனது ஊழியர்களை ஏஐ துறையில் பயிற்சி அளிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் ஆஸ்திரேலிய நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா குழுமத்தின் (Telstra Group) கிளை நிறுவனமாகவும், முன்னணி டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் தீர்வுகளை வழங்கும் நிறுவனமான வர்சென்ட் குழுமத்தில் (Versent Group) 75 சதவீத பங்குகளை 153 மில்லியன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1,300 கோடி தொகைக்கு கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம், இன்போசிஸ் மற்றும் டெல்ஸ்ட்ரா இணைந்து ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு AI தொழில்நுட்பத்தில் இயங்கும் கிளவுட் கம்பியூட்டிங் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்கும் ஒரு கூட்டு திட்டத்தை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
75 சதவீத பங்குகளை கைப்பற்றும் ஒப்பந்தத்தின் மூலம் இன்போசிஸுக்கு வர்சென்ட் குழுமத்தில் (Versent Group) இயக்க கட்டுப்பாடு இருக்கும், ஆனால் தெல்ஸ்ட்ரா தொடர்ந்து வர்சென்ட் குழுமத்தில் 25 சதவீத சிறுபான்மை பங்கை தக்க வைத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸின் அறிக்கையில், இந்த பங்கு கைப்பற்றல் மற்றும் கூட்டணி திட்டம் மூலம் ஆஸ்திரேலிய வணிக சந்தையில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பு, தொழில்நுட்ப துறையில் மேலும் சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு ஒரு அடித்தளமாக அமையும்.
மேலும் இந்த பங்கு பரிவர்த்தனை 2026-ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் சலில் பரேக் கூறுகையில் இந்த ஒப்பந்தம் மூலம், இரு நிறுவனங்களின் கிளவுட் சேவை திறன்களை இணைத்து உலகளாவிய அளவில் போட்டியிடும் திறனை பெறும் என்று தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications