இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கான ஜூன் காலாண்டு போனஸ் தொகையை அறிவித்துள்ளது. இந்த போனஸ் தொகை கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் குறைவாக கொடுத்துள்ளது மூலம் இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
பொதுவாக ஐடி ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை போனஸ் தொகையாக கொடுக்கும். இந்த பிரிவு தொகையை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டுக்கும் அந்த ஊழியரின் செயல் திறன் அடிப்படையில் போனஸ் தொகையாக அறிவிக்கும்.

இப்படி ஜூன் காலாண்டிற்கான போனஸ் தொகை அறிவிக்கப்பட்டதில் பெரும் சோகம் உருவாகியுள்ளது, கடந்த சில காலாண்டுகளாகவே ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கான போனஸ் தொகை, சம்பளத்தையும் கொடுப்பதில் பெரும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
அந்த வகையில் ஜூன் காலாண்டுக்கான சராசரி போனஸ் தொகை 70 சதவீதமாக உள்ளது, இது மார்ச் காலாண்டை போலவே இருந்தாலும், கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டில் கொடுக்கப்பட்ட 80 சதவீத போனஸ் தொகையை ஒப்பிடுகையில் சுமார் 10 சதவீதம் குறைவாகும்.
இந்த நிலையில் இன்போசிஸ் தரப்பில் வெளியான தரவுகள் படி இந்த காலாண்டில் 65 முதல் 80 சதவீதம் வரையிலான போனஸ் தொகை மட்டுமே கொடுத்துள்ளது. இந்நிறுவனம் ஊழியர்களை பல பிரிவுகளாக பிரித்திருக்கும் நிலையில், JL6 பிரிவு ஊழியர்களை காட்டிலும் JL4, JL5 பிரிவு ஊழியர்களுக்கு அதிகப்படியான போனஸ் தொகை கொடுக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் JL4 பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியாக 80 சதவீதமும், JL5 பிரிவு ஊழியர்களுக்கு 78 சதவீதமும் அதிகப்படியாக கொடுத்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் இருக்கும் 3,28,062 ஊழியர்களில் பெரும் பகுதி ஊழியர்கள் JL4, JL5, JL6 பிரிவில் தான் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்கள் உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் செலவுகளை குறைத்த காரணத்தாலும், பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான வர்த்தக மாற்றங்கள் அனைத்தும் கடுமையாக பாதிப்பை தனது நிதி நிலையில் உருவாக்கியுள்ளது.
இதன் அடிப்படையில் தான் தற்போது போனஸ் தொகையை பெரிய அளவில் குறைந்துள்ளது. குறைவான போனஸ் பெற்றுள்ள இன்போசிஸ் ஊழியர்களுக்கு அடுத்த பெரிய கவலை வருடாந்திர சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகள்.
கொரோனா தொற்று காலாத்தில் இருந்து இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை உரிய காலத்தில் உரிய நேரத்தில் அளிக்காமல் தொடர்ந்து கால தாமதம் செய்து வருகிறது. இந்த நிலையில் அடித்த சம்பள உயர்வு எப்போது அளிக்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.
தற்போது நிறுவன வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல் படி இந்த வருடம் சம்பள உயர்வு என்பது 2 கட்டங்களாக கொடுக்கப்படும். அடுத்த 2 மாதத்தில் JL4, JL5 பிரிவு ஊழியர்களுக்கும், ஜனவரி 2027ல் JL6 பிரிவு ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications