கல்லா கட்டிய இன்போசிஸ் சலில் பாரிக்.. ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 6 மாசம் லேட்டு.. ஆனா CEO-க்கு ரூ.50 கோடி..!

இந்திய பொருளாதாரத்தின் முக்கிய தூணாக விளங்கும் ஐடி துறைக்கு டிரம்ப் துவங்கி வைத்த வர்த்தக போர் மூலம் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதற்கான சிக்னலை மார்ச் காலாண்டு முடிவுகளில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை கொடுத்துள்ளது. இதில் டிசிஎஸ், விப்ரோ ஆகியவை சம்பள உயர்வு குறித்து இப்போதைக்கு முடிவு செய்ய முடியாது என அறிவித்துள்ளது.

இன்போசிஸ் நிர்வாகம் 2024ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வை ஜூலை 2024ல் கொடுக்க வேண்டியதை, இப்போது தான் அளிக்கத் துவங்கியுள்ளது. இதனால் 2025ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியாத நிலையில் இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக்-க்கு மட்டும் 50 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்துள்ளது.

இன்போசிஸ்: ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 6 மாசம் லேட்டு.. ஆனா CEO சலில் பாரிக்-கிற்கு ரூ.50 கோடி ESOP!

இந்திய ஐடி சேவைத் துறையில் டிசிஎஸ்-க்கு அடுத்தபடியாக இருக்கும் இன்போசிஸ், 2025 நிதியாண்டில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான சலில் பாரிக்கிற்கு ஊழியர் பங்கு விருப்பத் திட்டத்தின் (Employee Stock Option Plans - ESOPs) திட்டத்தின் கீழ் சுமார் 50 கோடி மதிப்புள்ள பங்குகளை வழங்கியுள்ளது.

இன்போசிஸ் நிறுவன சிஇஓ சலில் பாரிக்-கிற்கு 2025ஆம் நிதியாண்டுக்கான சம்பளம் குறித்த முழுமையான தகவல் வெளியாகாத நிலையில் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட இன்போசிஸ் நிர்வாகம் 50 கோடி ரூபாய் அளவிலான பங்குகளைக் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த பங்கு ஒதுக்கீடு, நிறுவனத்தின் பல்வேறு செயல்திறன் அடிப்படையில் அவருக்கு Restricted Stock Units (RSUs) வடிவில் இந்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வழங்கப்பட்டுள்ளன. இந்த ESOPகளுக்கான உரிமை பெறும் காலம், பங்குகள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 12 முதல் 24 மாதங்கள் வரை இருக்கும்.

இதோடு இன்போசிஸ் ஊழியர்களுக்கும் சிலருக்கு 5,000 Restricted Stock Units (RSUs)களையும் வழங்கியுள்ளது. இந்த RSUs நான்கு ஆண்டுகளில் சமமான தவணைகளில் உரிமை பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டு வழங்கியுள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.

இந்திய ஐடி சேவை துறையில் உள்ள சிஇஓ-க்களின் சம்பளத்தைப் பார்க்கும் 2024 நிதியாண்டில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ பட்டியலில் சலில் பரேக் இரண்டாவது இடத்தில் இருந்தார். இப்போதைய காலக்கட்டத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 66.25 கோடி ரூபாய். ஆனால் முதல் இடத்தில் இருந்த விப்ரோவின் முன்னாள் CEO தியரி டெலாபோர்ட் 20 மில்லியன் டாலர் அன்றைய மதிப்பில் இது சுமார் 166 கோடி ரூபாயாகும்.

சலில் பரேக்கின் 2022 நிதியாண்டில் அதிகப்படியாக 71 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார், 2023 நிதியாண்டில் இது 56 கோடியாக குறைந்தது. 2025ஆம் நிதியாண்டில் ESOP வாயிலாக மட்டுமே சிலில் பாரிக் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியிருக்கும் வேளையில் மொத்த சம்பளம் 2022ஆம் நிதியாண்டில் வாங்கிய 71 கோடி ரூபாயை தாண்டுமா..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+