இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலில் பாரிக் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், செயற்கை நுண்ணறிசார் (AI) ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட 200க்கும் மேற்பட்ட திட்டங்களில் தற்போது இன்ஃபோசிஸ் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்துவதால் வேலைவாய்ப்பு குறைப்பு எதுவும் இருக்காது என்றும், பெரிய நிறுவனங்களில் அனைத்து தொழில்நுட்பங்களும் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களில் எட்டில், ஆறு பேரை வெவ்வேறு நிலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து வருவதாக சலில் பாரிக் தெரிவித்தார். இதன் மூலம், டெக் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை முறையாகக் கையாண்டு, சந்தையில் உருவாகும் புதிய வாய்ப்புகளை இன்ஃபோசிஸ் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.
மேலும் உலகளவில் பொருளாதார சூழல் மேம்படுவதால், மிகப் பெரிய நிறுவனங்களில் ஜென்ஏஐ தொழில்நுட்பம் மேலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் என்று சலில் பாரிக் தெரிவித்தார். ஜென்ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் செலவு குறைப்பு மற்றும் வாடிக்கையாளர் இணைப்பு ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.
மேலும், இன்ஃபோசிஸ் கோபால்ட் (Infosys Cobalt) தளத்தைப் பல பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தி வருகிறது, 35,000 கிளவுட் சொத்துக்களையும் 300க்கும் மேற்பட்ட தொழிற்துறை கிளவுட் தீர்வுகளுக்கான ப்ளூபிரின்ட் உள்ளது என தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதை முக்கிய இலக்காகக் கொண்டு இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் இயங்கி வருகிறது. இதன் அடிப்படையில் டிசிஎஸ் முக்கியமான முயற்சியைக் கையில் எடுத்து வெற்றி கண்டுள்ளது.
ஏஐ துறையில் அதிகப்படியான வர்த்தகம் பெற வேண்டுமெனில் முதன்மையாகத் தனது ஊழியர்களை இப்பிரிவில் திறமையானவர்களாக மாற்ற வேண்டும். இதை முன்கூட்டியே உணர்ந்த டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்களில் ஒரு பெரும்பகுதியினருக்கு Generative AI திறன்களில் பயிற்சி அளித்து வெற்றி பெற்றுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் 6.1 லட்சம் ஐடி ஊழியர்கள் இருக்கும் வேளையில், இதில் 3.5 லட்சம் பணியாளர்களுக்கு Generative AI தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது முன்னதாக அறிவிக்கப்பட்ட 1.5 லட்சம் பணியாளர்களை விட கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications