டெக் துறையில் பணி நீக்கம் என்பது இன்று வரையில் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு டெக் ஜாம்பவான்கள் தொடங்கி, ஸ்டார்ட் அப்கள் வரையில் பணி நீக்கம் செய்து வருகின்றன.
இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது இன்னும் எத்தனை காலத்திற்கு தான் நீடிக்குமோ? என்ற கேள்வியும் டெக் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையில் இது குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலாகிருஷ்ணன், பணி நீக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம் தவிர்க்க முடியாதது?
கிரேட் பிளேஸ் டூ ஓர்க் (Great place to work 2023) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்த இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர், பணி நீக்கங்கள் விரும்பத்தகாதவை என்றாலும், அவை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம்
ஐடி துறையில் கடந்த 4 தசாப்தங்களாக 5 லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். தொடர்ந்து ஊழியர்களை சேர்த்து வருகின்றது. இவர்களில் 1.5 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மிக துரதிஷ்டவசமானது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும். எனினும் பணி நீக்கத்திற்கான காரணத்தையும் புரிந்து கொள்வதும் அவசியமான ஒன்று.
செலவை குறைக்க நடவடிக்கை
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக நிறுவன வாரியங்கள் செலவு குறைப்பு நடவடிக்கை முடிவு செய்தால், அவர்களுக்கு உள்ள ஒரு எளிதான வழி பணி நீக்கம் தான். இதன் மூலம் அவர்கள் உடனடியாக செலவை குறைக்க முடியும். இதன் மூலம் உடனடியாக செலவு குறைப்பு இலக்கினை அடைய முடியும்.
மனிதாபிமான அடிப்படை
ஆனால் இது இயந்திரத்தனமான ஒன்று. கண்மூடித்தனமான ஒன்று. இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். அதேசமயம் மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் செயல்பட்டால் அதுவும் பிரச்சனையிலேயே முடியும். ஆக இது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தியாவிலும் பணி நீக்கம்
அதேசமயம் சிலரை தக்க வைத்துக் கொள்ள சம்பள குறைப்பையும் செய்ய வேண்டும். சமீப காலமாகவே கூகுள் முதல் தொடங்கி அமேசான், டிஸ்னி வரையில் பணி நீக்கம் என்பது இருந்து வருகின்றது. இந்தியாவிலும் ஐடி நிறுவனங்கள் சில தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
இன்ஃபோசிஸ் பணி நீக்கம்
சில தினங்களுக்கு முன்பு தான் இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் இன்டெர்னல் தேர்வில் தேர்ச்சி பெறாத 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியானது.
ஃப்ரெஷர் அசெஸ்மென்ட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியதால் இந்த நிறுவனம் 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பணியாளர்களின் திறமையை சோதிக்க இந்த தேர்வை நடத்திய நிலையில், அதில் தோல்வியடைந்த சுமார் 400 பேரை தற்போது பணியில் இருந்து நீக்கி உள்ளது. இதற்கு முன் 208 புதியவர்கள் எஃப் ஏ தேர்வில் தோல்வியடைந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications