இந்தியாவின் 2வது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இன்போசிஸ் அதிகப்படியான அட்ரிஷன் விகித்தை எதிர்கொண்டு இருக்கும் இதேவேளையில் மூன்லைட்டிங் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ளது.
இதை சமாளிக்க இன்போசிஸ் எடுத்த இரு முக்கியமான நடவடிக்கைகள் தற்போது ஒட்டுமொத்த ஐடி நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஊழியர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ய தயாராகி வருகிறார்கள்.
ஐடி சேவை நிறுவனங்கள்
இந்தியாவில் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும், ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில் இன்போசிஸ் மட்டும் ஊழியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அலுவலகம் வந்தால் போதும் என்று அறிவித்துள்ளது. இன்போசிஸ் அறிவிப்பு பிற ஐடி சேவை நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
முன்லைட்டிங்
இதேபோல் முன்லைட்டிங் பிரச்சனையை இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிமுறைகள் மூலம எதிர்கொண்டு வரும் நிலையில் இன்போசிஸ் நிறுவனம் மட்டும் தனது ஊழியர்களுக்கு ப்ரீலான்சிங் வேலையை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இன்போசிஸ்
இவ்விரு முடிவுகளும் இன்போசிஸ் நிறுவனத்தின் அட்டிரிஷன் அளவுகளையும், மூன்லைட்டிங் பிரச்சனைகளையும் தீர்த்தாலும், 227 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி துறையின் பிற ஐடி நிறுவனங்களும் இதை பின்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது.
ஊழியர்கள் ராஜினாமா
ஏற்கனவே ஐடி ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்த காரணத்தால் ஊழியர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டு உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் வந்துள்ள நிலையில், இன்போசிஸ் அறிவித்துள்ள இவ்விரு சலுகை காரணமாக பெரும்பாலான ஐடி ஊழியர்கள் இன்போசிஸ் பணியில் சேரும் நிலை உருவாகும்.
டிசிஎஸ், விப்ரோ
இது கட்டாயம் ஐடி நிறுவனங்கள் மத்தியில் போட்டியை உருவாக்கும், இதனால் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும். மேலும் டிசிஎஸ், விப்ரோ ஆகியவை கட்டாயம் தனது முடிவில் இருந்து பின்வாங்காது, காரணம் முன்லைட்டிங்-ஐ இவ்விரு நிறுவனங்களும் பெரும் குற்றமாக பார்க்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications