இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், கடந்த வாரம் அனைத்து ஊழியர்களும், திட்ட மேலாளர்களுக்கும் முக்கியமான தகவல்களை அளித்தது.
ஆம் கடந்த 1.5 வருடமாக இன்போசிஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையிலும், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையிலும், ஊழியர்களைத் திரும்பவும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில் வர்த்தகம் மற்றும் பணிகளுக்கு ஏற்ப அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாயம் இருப்பின் டீம் உறுப்பினர்களைத் தேர்வு செய்து அழைக்கலாம். அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் கொரோனா வேக்சின் கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் எனவும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
WFH கட்
மேலும் டீம் உறுப்பினர் கட்டாயம் வரவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் வாடிக்கையாளர் தேவை இருப்பின் அலுவலக்கிற்கு வரலாம் என்ற தளர்வு அளித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம். மேலும் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் கொடுத்துள்ளது.
முன் ஏற்பாடுகள்
நீண்ட காலத்திற்குப் பின்பு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் காரணத்தாலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அளிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது இன்போசிஸ்.
பிரஷ்ஷர்கள்
இது ஒருபுறம் இருக்கப் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தையும் ஆலோசனை செய்து வருகிறது இன்போசிஸ். குறிப்பாகப் பிரஷ்ஷர்களை அழைக்கத் திட்டமிட்டு வருகிறது.
இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டிசிஎஸ்
இந்தியாவில் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வேக்சின் அளித்து வரும் காரணத்தால் தற்போது இன்போசிஸ் உட்பட விப்ரோ, ஹெச்சிஎல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் திட்டமிட்டு வருகிறது.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!



Click it and Unblock the Notifications