இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், ஜனவரி-மார்ச் காலாண்டிற்கான பர்பாமென்ஸ் போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
ஐடி ஊழியர்கள் பொறுத்த வரையில் வருடத்தின் இறுதியில் சம்பள உயர்வுக்காக காத்திருப்பது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு காலாண்டு இறுதியில் அளிக்கப்படும் பர்பாமென்ஸ் போனஸ் தொகைக்காக காத்திருக்கின்றனர். இதை பர்பாமென்ஸ் போனஸ் அல்லது வேரியபிள் பே என அழைப்பது உண்டு, இது ஒவ்வொரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 20-30 சதவீதம் இப்பிரிவில் வழங்கப்படும்.

இது ஊழியரின் செயல்திறன், ஊழியர் பணியாற்றும் அணியின் செயல்திறன், எனப் பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. இந்த 20-30 சதவீத சம்பளத்தை 4 காலாண்டுகளாகப் பிரித்து அளிக்கப்படும். அந்த வகையில் இன்போசிஸ் ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான வேரியபிள் பே அல்லது பர்பாமென்ஸ் போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் அறிவிப்புப் படி இந்த காலாண்டுக்கு PL6 அதாவது மேனேஜர் பதவியில் இருந்து அதற்கு கீழ் பதவியில் இருக்கும் அனைத்து பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
எதிர்பார்ப்பைக் குறைக்கும் போனஸ்: இந்த போனஸ் அறிவிப்பில், 2024 நிதிய ஆண்டின் கடைசி காலாண்டிற்கான ஊழியர்களுக்குச் சராசரியாக வேரியபிள் பே தொகை 60% ஆக குறைந்துள்ளதாகப் பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த காலாண்டுகளுடன் ஒப்பீடு: இதற்கு முன்பு, இன்போசிஸ் அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கு 73% சராசரி அளவீட்டையும், செப்டம்பர் காலாண்டில் 80% அளவீட்டையும், மார்ச் காலாண்டில் 75% என வேரியபிள் பே தொகையை வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 2023-24 ஆம் நிதியாண்டில் மிகவும் மோசமான நிலையில் வெறும் 60 சதவீதம் அளிக்கப்பட்டு உள்ளது.
வேரியபிள் பே தொகையில் வேறுபாடு: PL6 (PL6- மேனேஜ்) மற்றும் அதற்கும் கீழான ஊழியர்கள் (பிரஷ்ஷர்ஸ் பணியாளர்கள் தவிர) 55% முதல் 85% வரையில் பணம் பெற தகுதியுடையவர்கள். அதாவது, PL 4, 5 மற்றும் 6 நிலைகளில் உள்ள ஊழியர்கள் முறையே சராசரியாக 70%, 65% மற்றும் 57% போனஸ் பெறுவதாகத் தெரிகிறது.
வேரியபிள் பே குறித்து ஊழியர்களுக்கு தனித்தனி மின்னஞ்சல்கள் மூலம் அவர்கள் பெறும் தொகையைத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய சிலருக்கு மட்டும் 75% முதல் 85% வரை போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
வேரியபிள் பே குறைந்தது ஏன்?: இன்ஃபோசிஸ் நிறுவனம் போனஸ் தொகையைக் குறைத்ததற்கான காரணங்கள் இதுவரை தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
ஊழியர்களின் கவலை: வேரியபிள் பே தொகை குறைக்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இது ஊழியர்களின் மன உறுதியையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வேரியபிள் பே தொகை மே மாத சம்பளத்துடன் கிடைக்கும்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications