கர்நாடகா மாநிலம் மைசூரில் இருக்கும் இன்போசிஸ் நிறுவன வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அடுத்து ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்புகளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இன்போசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் இணையும் ஜூனியர் நிலையிலான ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது இந்த வளாகத்தில் தான்.

எனவே இங்கே ஊழியர்களின் எண்ணிக்கை எப்பொழுதுமே அதிகமாகவே இருக்கும். இந்த வளாகம் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இங்கே டிசம்பர் 31ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் சிறுத்தை ஒன்று நடமாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை செய்து ஊழியர்கள் யாரும் வளாகத்திற்குள் வர வேண்டாம் என உத்தரவிட்டனர் .பின்னர் பெரும்பாலான ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்போசிஸ் வளாகத்தில் நுழைந்த சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் ட்ரெய்னியாக சேர்ந்து இருப்பவர்களுக்கு புதிதாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளது. அதில் ஊழியர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வழிகளில் மட்டுமே சென்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ட்ரெய்னி நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட பாதைகளை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் குறிப்பிட்டு வரைபடத்தையும் வழங்கியுள்ளனர். இந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதைகளை மட்டுமே பயன்படுத்தி வேலை செய்யும் இடம் மற்றும் கேண்டின் உள்ளிட்டவருக்கு அவர்கள் சென்று வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியாக யாரும் நடந்து செல்லக்கூடாது என்றும் குறைந்தது 5 பேர் கொண்ட குழுவாக மட்டுமே செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் நடை பாதைகளில் இருக்கும் பெஞ்ச்களில் தனியாக அமர்ந்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் யாரும் கட்டிடத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் இன்போசிஸ் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பது அதிக சத்தத்தை எழுப்புவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் இன்போசிஸ் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கூண்டிற்குள் ஆடுகளை கட்டி வைத்து சிறுத்தை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும், ஐந்து கூண்டுகள் மற்றும் 25 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். மொத்தம் 15 பேர் கொண்ட குழு சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட 8 நாட்களாக இந்த சிறுத்தை யார் கண்ணிலும் படாமல் ஆட்டம் காட்டி வருகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!



Click it and Unblock the Notifications