Infosys, TCS நிறுவன ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி.. நீண்ட நாள் எதிர்பார்த்த சம்பள உயர்வு வரப்போகுது!

இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கான வருடாந்திர செயல்திறன் ஆய்வை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு வந்த சம்பள உயர்வு 2026 ஆம் ஆண்டில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது.

நிறுவனத்தின் மனிதவளத் துறை அனுப்பிய மின்னஞ்சலின்படி, இன்ஃபோசிஸ் ஊழியர்கள் தங்கள் தற்செயல் மதிப்பீடுகளை அக்டோபர் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வழக்கமான ஒரு செயல்முறையாக இது இருந்தாலும், கடந்த 2 ஆண்டுகளில் சம்பள உயர்வு தாமதப்படுத்தப்பட்டதாலும் இந்த மதிப்பீட்டுக் காலம் ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Infosys, TCS நிறுவன ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி.. நீண்ட நாள் எதிர்பார்த்த சம்பள உயர்வு வரப்போகுது!

இது வழக்கமான செயல்முறைதான் என்றாலும், கடந்த ஆண்டை போல் அல்லாமல், இந்த முறை நிறுவனம் நிச்சயமாக சம்பள உயர்வை வழங்கும் என நம்புகிறோம் என்று இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனம் பொதுவாக அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தை கணக்கில் கொண்டு மதிப்பீடுகளை செய்யும். அதன் முடிவுகள் பொதுவாக ஜனவரி மாதம் அறிவிக்கப்படும். இறுதி சம்பள உயர்வு கடிதங்கள் ஜூன் மாதம் வழங்கப்படும். இருப்பினும், அண்மைக் காலங்களில் இந்த நடைமுறையை நிறுவனம் பலமுறை தாமதப்படுத்தியுள்ளது.

உதாரணமாக, கடந்த நிதியாண்டுக்கான சம்பள உயர்வு தாமதமாகி, ஜனவரி மற்றும் ஏப்ரல் 2025 என இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது. இதில், குழுத் தலைவர்கள் வரையிலான JL5 நிலை ஊழியர்களுக்கு ஜனவரியில் ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், JL6 மற்றும் அதற்கு மேலான உயர் மட்ட ஊழியர்கள் ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

அதிலும், இந்த சம்பள உயர்வுகள், நவம்பர் 2023இல் அறிவிக்கப்பட்ட முந்தைய உயர்வைவிட 5 முதல் 10 சதவீதம் வரை குறைவாக இருந்தன. அதற்கு முன், 2022இல் சம்பள உயர்வை நிறுவனம் முழுமையாக நிறுத்தி வைத்திருந்தது. தற்போது சுமார் 3.23 லட்சம் ஊழியர்களை payroll-இல் கொண்டுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சம்பள உயர்வின் கொள்கை, ஒட்டுமொத்த இந்திய ஐடி துறையிலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இன்ஃபோசிஸ் மட்டுமல்ல, அதன் போட்டியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனமும் செயல்திறன் மதிப்பீடுகளைத் தொடங்கியுள்ளது. TCS இன் தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குன்னும்மாலின் அறிக்கையில், C3A நிலை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்றும், சிறந்த செயல்திறன் காட்டியவர்களுக்கு இரட்டை இலக்க சம்பள உயர்வு கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் தனது இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை அக்டோபர் 16ஆம் தேதியன்று அறிவிக்கவுள்ளது. நிறுவனத்தின் நிதி நிலை, வரவிருக்கும் சம்பள உயர்வின் அளவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, 2026 ஆம் ஆண்டு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் சம்பள உயர்வைக் கொண்டு வருமா என்பதே இப்போது பெரிய கேள்வியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+