இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கான வருடாந்திர செயல்திறன் ஆய்வை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு வந்த சம்பள உயர்வு 2026 ஆம் ஆண்டில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது.
நிறுவனத்தின் மனிதவளத் துறை அனுப்பிய மின்னஞ்சலின்படி, இன்ஃபோசிஸ் ஊழியர்கள் தங்கள் தற்செயல் மதிப்பீடுகளை அக்டோபர் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வழக்கமான ஒரு செயல்முறையாக இது இருந்தாலும், கடந்த 2 ஆண்டுகளில் சம்பள உயர்வு தாமதப்படுத்தப்பட்டதாலும் இந்த மதிப்பீட்டுக் காலம் ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இது வழக்கமான செயல்முறைதான் என்றாலும், கடந்த ஆண்டை போல் அல்லாமல், இந்த முறை நிறுவனம் நிச்சயமாக சம்பள உயர்வை வழங்கும் என நம்புகிறோம் என்று இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனம் பொதுவாக அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தை கணக்கில் கொண்டு மதிப்பீடுகளை செய்யும். அதன் முடிவுகள் பொதுவாக ஜனவரி மாதம் அறிவிக்கப்படும். இறுதி சம்பள உயர்வு கடிதங்கள் ஜூன் மாதம் வழங்கப்படும். இருப்பினும், அண்மைக் காலங்களில் இந்த நடைமுறையை நிறுவனம் பலமுறை தாமதப்படுத்தியுள்ளது.
உதாரணமாக, கடந்த நிதியாண்டுக்கான சம்பள உயர்வு தாமதமாகி, ஜனவரி மற்றும் ஏப்ரல் 2025 என இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது. இதில், குழுத் தலைவர்கள் வரையிலான JL5 நிலை ஊழியர்களுக்கு ஜனவரியில் ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், JL6 மற்றும் அதற்கு மேலான உயர் மட்ட ஊழியர்கள் ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
அதிலும், இந்த சம்பள உயர்வுகள், நவம்பர் 2023இல் அறிவிக்கப்பட்ட முந்தைய உயர்வைவிட 5 முதல் 10 சதவீதம் வரை குறைவாக இருந்தன. அதற்கு முன், 2022இல் சம்பள உயர்வை நிறுவனம் முழுமையாக நிறுத்தி வைத்திருந்தது. தற்போது சுமார் 3.23 லட்சம் ஊழியர்களை payroll-இல் கொண்டுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சம்பள உயர்வின் கொள்கை, ஒட்டுமொத்த இந்திய ஐடி துறையிலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
இன்ஃபோசிஸ் மட்டுமல்ல, அதன் போட்டியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனமும் செயல்திறன் மதிப்பீடுகளைத் தொடங்கியுள்ளது. TCS இன் தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குன்னும்மாலின் அறிக்கையில், C3A நிலை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்றும், சிறந்த செயல்திறன் காட்டியவர்களுக்கு இரட்டை இலக்க சம்பள உயர்வு கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் தனது இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை அக்டோபர் 16ஆம் தேதியன்று அறிவிக்கவுள்ளது. நிறுவனத்தின் நிதி நிலை, வரவிருக்கும் சம்பள உயர்வின் அளவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, 2026 ஆம் ஆண்டு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் சம்பள உயர்வைக் கொண்டு வருமா என்பதே இப்போது பெரிய கேள்வியாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications