இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த ஒப்பந்தத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் செய்திருந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இன்போசிஸ் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது புதுப் பிரச்சனையாக 1.5 பில்லியன் டாலர மதிப்பிலான ஒப்பந்ததை இழந்துள்ளது, அதன் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருக்கும். இன்போசிஸ் பங்குகள் செவ்வாய்க்கிழமை பெரும் சரிவை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாக ஒரு பெயர் வெளியிடாத நிறுவனத்துடன் AI துறையில் சார்ந்து 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்திற்குக் கையெழுத்திட்டது, தற்போது இந்த ஒப்பந்தம் முறிந்துள்ளது.
இதுகுறித்து இன்போசிஸ் நிர்வாகம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இன்போசிஸ் உடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சர்வதேச நிறுவனம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது, இதனால் இரு தரப்பும் மாஸ்டர் ஒப்பந்தத்தைத் தொடரப்போவது இல்லை எனச் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் படி இன்போசிஸ் நிறுவனத்தின் பிளாட்பார்ம்ஸ் மற்றும் AI சொல்யூஷன் மூலம் இந்தச் சர்வதேச நிறுவனத்தின் கட்டமைப்பை டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் மற்றும் வர்த்தக அமைப்புகளை மார்டனைசேஷன் செய்வது தான் திட்டம்.
இன்போசிஸ் ஆரம்பம் முதல் இந்தச் சர்வதேச நிறுவனத்தின் பெயர் பயன்படுத்தவில்லை, அதேபோல் இது தனது வாடிக்கையாளர் என்றும் இதுவரையில் கணக்கில் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பங்குச்சந்தையில் பெரிய பாதிப்பு இருக்காது எனத் தெரிகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரி நிலஞ்சன் ராய் சுமார் ஆறு ஆண்டுகள் இப்பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்த 2 வாரத்தில் ஒப்பந்தம் ரத்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஐடி சேவை நிறுவனத்தில் லார்ஜ் டீல் எனப்படும் 1 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படும் வேளையில் இன்போசிஸ் 1.5 பில்லியன் டாலர் திட்டத்தைத் தான் பெரிதும் நம்பிய AI துறையில் இருந்து இழந்துள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம் கடந்த 12மாதத்தில் மட்டும் 8க்கும் அதிகமான உயர் அதிகாரிகளை இழந்து ஒட்டுமொத்த உயர்மட்ட நிர்வாகமும் ஆட்டம் கண்டு இருக்கும் வேளையில் 1.5 பில்லியன் டாலர் திட்டத்தை இழந்துள்ளது சிஇஓ சலில் பாரிக்-ன் நிர்வாகச் சறுக்கல்-ஐ காட்டுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications