இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து முக்கியமான அப்டேட் வந்துள்ளது. இன்போசிஸ் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு என்ற வார்த்தையைக் கேட்டாலே கோபம் வரும் அளவு மோசமான சம்பள உயர்வை சில நாட்களுக்கு முன்பு கொடுத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வைப் பகுதி பகுதியாக அளிப்பதாகவும், ஜனவரி மாதம் மீண்டும் சம்பள உயர்வு கடிதம் சில ஊழியர்களுக்கு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதம் சம்பள உயர்வு வரும் என்பதை இன்போசிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சில பிஸ்னஸ் யூனிட்கள் தங்களுடைய பட்ஜெட் மறுசீரமைப்பை செய்து வரும் வேளையில், ஜனவரி மாதம் சில இன்போசிஸ் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வுக்கான கடிதம் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஜூன்/ஜூலையில் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு அளிக்கப்படும். ஆனால் இந்த வருடம் சுமார் 8 மாதமாகச் சம்பள உயர்வை அளிக்காமல் செப்டம்பர் காலாண்டில் ஊழியர்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக நவம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வை அளிக்கப்பட்டதாகக் கூறி பெரிய வேட்டு வைத்தது.

சம்பள உயர்வுக்காகக் காத்திருந்த ஊழியர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரையில் சம்பள உயர்வு கடிதத்தை அளிக்காமல் சில நாட்களுக்கு முன்பு கொடுத்தது. இந்த வருடம் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் வெறும் 40 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கொடுக்கப்பட்ட சம்பள உயர்வு 4 சதவீதம், 5 சதவீதம் அதிகப்படியாக 10 சதவீதம் மட்டுமே இருந்ததாக இன்போசிஸ் ஊழியர்கள் புலம்பினர். இந்த வருட சம்பள உயர்வை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துப் பெரிய அளவில் குறைத்தது.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications