மைசூர் இன்ஃபோசிஸ் கேம்பஸ்-ல் சிறுத்தை நுழைந்த சம்பவம் கடந்த 10 நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் வேளையில், இந்த வளாகத்தில் புதன்கிழமை 3வது முறையாகச் சிறுத்தை சுற்றித்திரியும் புகைப்படம் கேமராவில் பதிவாகியுள்ளது.
பல நாட்களாக வனத்துறையினர் போராடும் வேளையில், தொடர்ந்து அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு கையில் சிக்காமல், கேமராவில் மட்டும் சிக்கும் கில்லாடி சிறுத்தையாக மாறியுள்ளது. இதேவேளையில் இன்போசிஸ் கேம்பஸ்-ல் இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் பல தரப்பு விதிமுறைகள் உடன் தொடர்ந்து இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது முறையாகச் சிறுத்தை கண்டறியப்பட்டுள்ளது, இந்த முறை வெப்பமான நிலை கண்டறியும் ட்ரோன் மூலம் கண்டறியப்பட்டது. காலை 12:30 மணி அளவில், மழைநீர் வெளியேற்றம் குழாய்க்கு அருகேயுள்ள பகுதியில் சிறுத்தை இருப்பதை வனத்துறையினர் உறுதிப்படுத்தினர்.
சிறுத்தை, இன்போசிஸ் வளாகத்தின் முக்கிய பணி மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து தொலைவில் வசிக்கலாம் அல்லது மழைநீர் வெளியேற்றும் குழாயை அடிக்கடி நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
வனப்பாதுகாவலர் எம். மாலதி பிரியா, சிறுத்தை கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு அருகில் முன்பு அமைக்கப்பட்ட அனைத்து கூண்டுகளும் இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் காரணத்தால் விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்தார். இதேவேளையில் சிறுத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இன்போசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கேம்பஸ் இந்தியாவில் சேர்வு செய்யப்பட்டும் பெரும் பகுதி பிரஷ்ஷர்ஸ் ஊழியர்களுக்கான பயிற்சி இடமாக விளங்கி வருகிறது, இதனால் வருடம் முழுவதும் அதிகப்படியான ஊழியர்கள் இருப்பது வழக்கம். இந்த வளாகம் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி வன விலங்குகள் வருவதும், செல்வதும் வழக்கம். இப்படிதான் டிசம்பர் 31ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் சிறுத்தை ஒன்று நடமாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இந்த நிலையில் புத்தாண்டு தினம் முதல் சிறுத்தையைப் பிடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதேவேளையில் இன்போசிஸ் நிர்வாகம் ட்ரெய்னி ஊழியர்களுக்கு அனைவருக்கும் முக்கியமான விதிமுறைகளைக் கொடுத்து, இதனைக் கட்டாயம் பாலோ செய்யும்படி உத்தரவிட்டு உள்ளது.
மைசூர் கேம்பஸ்-ல் பணியாற்றும் அனைத்தும் ஊழியர்களும் குறிப்பிட்ட பாதைகளை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் குறிப்பிட்டு வரைபடத்தையும் வழங்கியுள்ளனர். இந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதைகளை மட்டுமே பயன்படுத்தி வேலை செய்யும் இடம் மற்றும் கேண்டின் உள்ளிட்டவருக்கு அவர்கள் சென்று வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியாக யாரும் நடந்து செல்லக்கூடாது என்றும் குறைந்தது 5 பேர் கொண்ட குழுவாக மட்டுமே செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் நடை பாதைகளில் இருக்கும் பெஞ்ச்களில் தனியாக அமர்ந்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் யாரும் கட்டிடத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் இன்போசிஸ் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதோடு அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பது, அதிக சத்தத்தை எழுப்புவது போன்றவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், இதன் மூலம் சிறுத்தைக்கு மனிதர்கள் இருப்பது தெரியக்கூடும் என்பதைல் இத்தகைய செயல்களை செய்யக்கூடாது என இன்போசிஸ் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications