ஒரு நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்ல அதில் பணிபுரியும் பணியாளர்களின் செயல் மற்றும் பணி சார்ந்த அறிவு திறனும் காலத்துக்கு தகுந்த மாதிரி அதிகரிக்க வேண்டும். இதனை உணர்ந்து பல நிறுவனங்கள் பணியாளர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நாட்டின் இரண்டாவது பெரிய ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ், பணியாளர்களின் ரீஸ்கில்லிங்-ஐ மேம்படுத்தும் நோக்கில் புதிய மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மிஹான் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இன்போசிஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன் புதிய டெவலப்மென்ட் சென்டரை திறந்துள்ளது. இன்போசிஸ் 2,65,000 சதுர அடி பரப்பளவில் ரூ.230 கோடி முதலீட்டில் இந்த புதிய மையத்தை திறந்துள்ளது.
இந்த புதிய மைய திறப்பு விழாவில் மத்திய அமைச்சர், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் இன்போசிஸின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மையம் ஒரு ஹைபிரிட் வேலை மாதிரி வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பணியாளர்களின் திறமைகளின மறுதிறன் மற்றும் திறன்களை மேம்படுத்த உதவும்.
இன்போசிஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல்,சமூக மற்றும் நிர்வாக உறுதிபாடுகள் மற்றும் பசுமை கட்டிட தரங்களுக்கு இணங்க, பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் மற்றும் நிலையான நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த மையம் கட்டப்பட்டுள்ளது என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மையத்தில் நீர், எனர்ஜி போன்ற இயற்கை வள நுகர்வை குறைக்க புதுமையான அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. குறைந்த எனர்ஜி கொண்ட குளர்ச்சி, ஸ்மார்ட் பில்டிங் ஆட்டோமேஷன்,திறமையான மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீரை 100 சதவீதம் மறுசுழற்சி செய்தல் ஆகியவை இந்த கட்டிடத்தில் இடம் பெற்றுள்ளன.
3,000 பணியாளர்களை உள்ளடக்கிய இந்த மேம்பாட்டு மையம், இன்போஸின் எதிர்கால ஹைபிரிட் பணியுடன் ஒத்துபோகிறது. இந்த மேம்பாட்டு மையம், தொலைத்தொடர்பு, வங்கி, சில்லரை விற்பனை, விண்வெளி, ஆட்டோமொபைல், தளவாடங்கள் மற்றும் உற்பத்தி போன்ற தொழில்களில் கிளவுட், ஏ.ஐ., மற்றும் டிஜிட்டல் போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் பணிபுரியும் வாய்ப்பையும் பணியாளர்களுக்கு வழங்கும் என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிலஞ்சன் ராய் கூறுகையில், இந்த மேம்பாட்டு மையத்தின் திறப்பு விழா, தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளுக்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். இந்த மையம் வணிகங்களின் வளர்ச்சிக்கும்,நேரடி மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதற்கும், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மையத்தின் அதிநவீன தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிகங்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications