கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீக்கப்பட அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சொந்த ஊரில் இருக்கும் அனைத்தும் ஊழியர்களும் பொட்டி படுக்கை உடன் வேலை செய்யும் ஊருக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.
இப்படி என்ன அறிவிப்பு வந்துள்ளது..?
இன்போசிஸ் ஊழியர்கள்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஊழியர்கள் கடந்த 2 வருடமாகக் கொரோனா தொற்றுக் காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையிலும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் இருந்தது.
மார்ச் 31
இந்நிலையில் மார்ச் 31 முதல் அனைத்துக் கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரத்தில் இன்போசிஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு முக்கியமான ஈமெயில் அனுப்பியது.
ஏப்ரல் 1
இந்த ஈமெயிலில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி பெற்றவர்களைத் தவிரப் பிற அனைத்து ஊழியர்களும் வாரத்தில் 2 நாள் அலுவலகத்திற்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டாயம் வர வேண்டும் என அறிவித்துள்ளது. முதலில் இதை விருப்பத்தின்படி வரலாம் என அறிவிக்கப்பட்டாலும், பின்பு அனைத்து பிரிவுகளிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரு நகரங்கள்
இதனால் சொந்த ஊரிலும், வெளியூரிலும் இருக்கும் இன்போசிஸ் ஊழியர்கள் வேகவேகமாகப் பணியாற்றும் பெரு நகரங்களுக்குப் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். மேலும் பெரு நகரங்களில் இதுநாள் வரையில் காலியாக இருந்த வீடுகள் தற்போது வேக வேகமாகப் புக் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதுப் பிரச்சனை
விரைவில் டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்கள், ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் அறிவிப்பை வெளியிட உள்ளது. இதேபோல் ஐடி நிறுவனங்கள் தற்போது மிகவும் முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. அலுவலகத்திற்குக் கட்டாயமாக அழைக்கப்படும் ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்யத் தயாராகிறார்கள் என ஆய்வு கூறுகிறது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications