இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், 9,200 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டமானது ஜூன் 25 முதல் தொடங்கவுள்ளது. இந்த பைபேக் திட்டத்தில் பங்குகளின் விலையை அதிகபட்சமாக 1,750 ரூபாய் வரை வாங்க திட்டமிட்டுள்ளது.
இந்த பங்குகளை திரும்ப பெறுவதற்கான ஒப்புதலை நிர்வாகம் கடந்த ஏப்ரல் 14, 20201 அன்று வழங்கியது. இதே பங்குதாரர்கள் இந்த நிறுவனத்தின் 40 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தித்தாள்களில் அறிவிப்பு
பெங்களுருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், பங்கு சந்தை வழியாக ஓபன் மார்கெட் மூலம் பங்குகளை திரும்ப பெறுவதாக ஜூன் 23 அன்று பல செய்தித்தாள்களில் ஒரு பொது அறிவிப்பினையும் வெளியிட்டது. இது குறித்து பங்கு சந்தைக்கு அளித்த தாக்கலிலும் தெரிவித்துள்ளது.
நாளை முதல் தொடக்கம்
பங்குகளை திரும்ப பெறும் இந்த திட்டத்திற்கு கோடக் மகேந்திரா கேப்பிட்டல் நிறுவனம், மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின் படி, ஜூன் 25 முதல் பங்குகள் திரும்ப வாங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு கடைசி தேதி டிசம்பர் 24, 2021 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
நிதி இருப்பு?
இந்த பைபேக் திட்டத்திற்கான நிதியினை அதன் ப்ரீ ரிசர்வ்வில் இருக்கும் தொகை அல்லது பிறவற்றின் மூலமும் பெறப்படும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பைபேக் திட்டமானது விதிமுறை 16ன் படி ஒபன் மார்கெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது. எனினும் இந்த திட்டத்தில் புரோமோட்டர், புரோமோட்டார் குழு மற்றும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நபர்களுக்கு இல்லை.
இன்ஃபோசிஸ் பங்கு விலை
நாளை பைபேக் திட்டம் தொடங்கவுள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று, என்.எஸ்.இ-யில் 3.43% அதிகரித்து, 1554.60 ரூபாயாக காணப்படுகிறது.
இதே பி.எஸ்.இ-யில் 3.56% அதிகரித்து, 1555 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று மட்டும் 50 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.