இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், 9,200 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டமானது ஜூன் 25 முதல் தொடங்கவுள்ளது. இந்த பைபேக் திட்டத்தில் பங்குகளின் விலையை அதிகபட்சமாக 1,750 ரூபாய் வரை வாங்க திட்டமிட்டுள்ளது.
இந்த பங்குகளை திரும்ப பெறுவதற்கான ஒப்புதலை நிர்வாகம் கடந்த ஏப்ரல் 14, 20201 அன்று வழங்கியது. இதே பங்குதாரர்கள் இந்த நிறுவனத்தின் 40 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தித்தாள்களில் அறிவிப்பு
பெங்களுருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், பங்கு சந்தை வழியாக ஓபன் மார்கெட் மூலம் பங்குகளை திரும்ப பெறுவதாக ஜூன் 23 அன்று பல செய்தித்தாள்களில் ஒரு பொது அறிவிப்பினையும் வெளியிட்டது. இது குறித்து பங்கு சந்தைக்கு அளித்த தாக்கலிலும் தெரிவித்துள்ளது.
நாளை முதல் தொடக்கம்
பங்குகளை திரும்ப பெறும் இந்த திட்டத்திற்கு கோடக் மகேந்திரா கேப்பிட்டல் நிறுவனம், மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின் படி, ஜூன் 25 முதல் பங்குகள் திரும்ப வாங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு கடைசி தேதி டிசம்பர் 24, 2021 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
நிதி இருப்பு?
இந்த பைபேக் திட்டத்திற்கான நிதியினை அதன் ப்ரீ ரிசர்வ்வில் இருக்கும் தொகை அல்லது பிறவற்றின் மூலமும் பெறப்படும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பைபேக் திட்டமானது விதிமுறை 16ன் படி ஒபன் மார்கெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது. எனினும் இந்த திட்டத்தில் புரோமோட்டர், புரோமோட்டார் குழு மற்றும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நபர்களுக்கு இல்லை.
இன்ஃபோசிஸ் பங்கு விலை
நாளை பைபேக் திட்டம் தொடங்கவுள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று, என்.எஸ்.இ-யில் 3.43% அதிகரித்து, 1554.60 ரூபாயாக காணப்படுகிறது.
இதே பி.எஸ்.இ-யில் 3.56% அதிகரித்து, 1555 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று மட்டும் 50 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications