டெல்லி: ஆசியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், கடந்த திங்களன்று ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லி இருக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் மீது சுமத்தப்பட்ட மோசடி புகார்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த நல்ல செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் சுமார் 6 சதவிகிதம் வரை உயர்ந்தது. தற்போது பி எஸ் இ-ல் இன்ஃபோசிஸ் நிறுவன பங்கின் விலை 725 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
பெயர் சொல்ல விரும்பாத நபர்கள் கொடுத்த புகார்களைப் பொறுத்த வரை, எந்தவொரு குற்றச்சாட்டையும் உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தணிக்கைக் குழு, இந்த புகாரை விசாரிக்க நியமித்த சட்ட நிறுவனமான ஷார்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் அண்ட் கோவின் விசாரணையைத் தொடரச் சொல்லி இருக்கிறார்களாம். இந்த விவரங்களை எல்லாம் பங்குச் சந்தைகளுக்கு முறையாக தெரியப்படுத்தி இருக்கிறார்களாம்.
அதோடு, பெயர் குறிப்பிட விரும்பாத நபர்கள் கொடுத்த புகாரில், எந்த ஒரு நம்பகத் தன்மையோ, உறுதித் தன்மையோ இல்லை. தற்போது விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. எனவே இந்த பிரச்னை குறித்து மேற்கொண்டு எதையும் பேச முடியாது எனச் சொல்லி இருக்கிறார்கள் இன்ஃபோசிஸ் தரப்பினர்கள்.
"விசாரணை முழுமையாக முடிந்த பின், கிடைக்கும் விசாரணை அறிக்கைகளை வைத்து, முக்கிய விவரங்களை பங்குச் சந்தைகளுக்கு தெரியப்படுத்துவோம்" என்று இன்ஃபோசிஸ் நிறுவனமே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தணிக்கைக் குழு, தங்களின் இண்டர்னல் ஆடிட்டரான எர்ன்ஸ்ட் & யங்குடனும் இந்த பிரச்னை குறித்து ஆலோசித்து வருகிறார்களாம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது இந்த புகார் எழுந்த போது, ஒரு தனி விசாரணை நடத்த ஷர்துல் அமர்சந்த் மங்கள் தாஸ் அண்ட் கோ நிறுவனத்தை அமர்த்துவதற்கு முன்பில் இருந்தே, எர்னஸ்ட் அண்ட் யங் ஆடிட்டர்களுடன் இந்த புகாரைப் பற்றிப் பேசி வருகிறார்களாம். எது எப்படியோ ஒரு மிகப் பெரிய இந்திய கார்ப்பரேட் நிறுவனத்தின் மீது சுமத்திய குற்றங்கள் ஒழுங்காக விசாரிக்கப்பட்டு ஒரு நல்ல முடிவுக்கு வந்தால் எல்லோருக்கும் நல்லது தான்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications