இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடி துறையானது, கொரோனா ரணகளத்திற்கு மத்தியிலும் பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனர். என் ஆர் நாராயண மூர்த்தி கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று நோய் ஐடி துறையில் நிறைய வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது.
சொல்லப்போனால் தற்போதைய பணி மாடல் இந்திய நிறுவனங்கள், இன்னும் போட்டித் தன்மையுடன் இருப்பதற்கான வாய்ப்பை வழங்கிறது என்றும் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் எப்படி வேலை செய்வது?
மேலும் கொரோனா தொற்று நோயானது இந்திய நிறுவனங்கள், எப்படி தனித்து வேலை செய்வது என்பதனை வலியுறுத்தியுள்ளது. சொல்லப்போனால் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு எப்படி சேவையை தனித்துவமாக வழங்குவது என தெரிவித்துள்ளது. இது உலகளாவிய விநியோக மாதிரியை விட முன்னேற்றம் கண்டுள்ளது.
விசா தேவையை குறைக்கிறது?
இது எங்கள் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் ஹெச்1 பி விசா மூலம், வாடிக்கையாளர்களின் இடத்திற்கு செல்வதன் தேவையை குறைக்கிறது. ஆக ஐடி நிறுவனங்களின் தலைவர்கள், இப்போது இந்தியாவின் ஐடி சேவையை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக்கும், இந்தியாவில் இருக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்புகளை எளிதாக்க விர்சுவல் இணைப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன.
நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன
தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் இந்த சேவையை, உலகெங்கிலும் இயக்க சவலாக இருப்பதால், இந்திய தகவல் தொழில் நுட்ப துறைக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளது எனலாம். அதாவது இது வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உதவக்கூடும் என்றும் மூர்த்தி கூறியுள்ளார்.
இந்தியாவில் செலவினங்கள் குறைவு?
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் ஐடி மென்பொருள் நிபுணர்களின் செலவு விகிதத்தினை ஒப்பிடும்போது, இந்தியாவில் செலவு விகிதம் குறைவு தான். அதோடு ஒட்டுமொத்த சாப்ட்வேர் செலவுகளும் இந்தியாவில் இருந்து அதிகபட்ச மதிப்பு உள்ளது. எனவே எங்களின் மார்ஜின் மேம்பட வாய்ப்புள்ளது. நாங்கள் சந்தையில் அதிக போட்டித் தன்மையுடன் இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
இது நல்ல விஷயம் தான்
இதற்கிடையில் முன்னணி ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம், மாணவர்களை வேலைக்கு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளன.
நடப்பு ஆண்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் வேலையே இருக்குமா? இல்லையா? என்ற நிலையில், இதுவே ஐடி துறையினரின் வளர்ச்சிக்கு இதுவே சாட்சியம். இது உண்மையில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஒரு சூப்பர் விஷயம் தான்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications